districts

img

வீட்டுமனை வழங்க பொதுமக்கள் கோரிக்கை

அவிநாசி, ஆக.6 – ஈட்டிவீரம்பாளையம் ஏடி காலனி சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை கேட்டு செவ்வாயன்று அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.  அவிநாசி ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக் குட்பட்ட முட்டியங்கிணறு ஏடி காலனியில் 20 ஆண்டுக ளுக்கு மேலாக பலர் வசித்து வருகின்றனர். ஒரே வீட்டில்,  மூன்று குடும்பங்கள் வசிக்கும் நிலை உள்ளது. இதனால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தனியாக வீட்டு மனை ஒதுக்கி தரக் கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித  நடவடிக்கையும் இல்லை. எனவே அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனை கேட்டு மனு அளிக்க வந்ததாக  அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.