districts

img

2,832 மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நிவாரணம் வழங்கல்

தஞ்சாவூர், மே 5-  தஞ்சாவூர் மாவட்டத்தில் 105 அரசு பள்ளிகளில் ஏழ்மை யில் உள்ள 2,832 மாணவர்க ளின் குடும்பங்களுக்கு, ஆசி ரியர்கள் சொந்த நிதியில் இருந்து நிவாரணம் வழங்கி யதை ஆட்சியர் பாராட்டி னார்.

தஞ்சாவூர் ஒன்றியத்தில் 9, பூதலூரில் 4, பாபநாசத்தில் 53, திருவிடைமருதூரில் 11, மதுக்கூரில் 5, பட்டுக்கோட் டையில் 11, அம்மாபேட்டை யில் 5 பள்ளிகளிலும் என 105 பள்ளிகளை சேர்ந்த, தொ டக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் 103 தலைமை யாசிரியர்கள், 312 ஆசிரி யர்கள், 17 பள்ளி பணியா ளர்கள், அவர்கள் பள்ளியில் பயிலும், மிகவும் பின்தங்கிய மாணவர்களின் குடும்பங்க ளுக்கு நிவாரணம் வழங்க முடிவு செய்து, ரூ.15.27 லட்சம் நிதியை திரட்டினர். இதன் மூலம் 2,832 மாணவ, மாணவர்களின் குடும் பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொ ருட்களை செவ்வாய்க் கிழமை வழங்கினர்.

இதன் தொடக்க விழா பசுபதிகோவில் துாய கேப்ரி யல் பள்ளியில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோ விந்தராவ், மாணவர்களின் பெற்றோர்களுக்கு நிவார ணப் பொருட்களை வழங்கி னர். இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், வட்டார கல்வி அலுவலர்கள் செல்வ குமாரி, நடராஜன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். மேலும், ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கு ஆட்சி யர் பாராட்டு தெரிவித்தார்.