தருமபுரி, ஜன.30- தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய விவசாயிகள், தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள எண்ணேகோல்புதூர், நீர் பாசன திட்டம், தூள் செட்டி அழியாளம், நீர் பாசன திட்டம், புலிக்கரைக்கு நீர் கொண்டுவரும் திட்டம், ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் ஆகிய நீர் பாசன திட்டங்களை தமிழக அரசு நிறை வேற்ற வேண்டும். பருவமழை இல்லாத தால் தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்ட மாக அறிவிக்க வேண்டும். மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடனுக்கு சென்றால் ரசாயன உரங் களை வாங்கிக் கொள்ள வேண்டுமென வற்புறுத்துகின்றனர். இயற்கை விவசா யம் செய்யும் தங்களுக்கு ரசாயன உரங் கள் தேவையில்லை. பயிர் கடன் மட்டும் வழங்கினால் போதும். பவர் கிரீட் நிறுவனத்தால் உயர் மின் கோபுரம் அமைக்க விவசாயிகளின் நிலங்களை எடுத்துக் கொண்டனர். எட்டு ஆண்டுகள் கடந் தும் அதற்குரிய நிவாரண தொகையினை வழங்காமல் உள்ளனர். அதனை உடனடி யாக வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கோபா லபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க் கரை ஆலை மேலாண்மை இயக்குநர் பிரியா, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் யோக விஸ்ணு, வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணன், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.