திருப்பூர், ஜூன் 25- ஒன்றிய பாஜக அரசின் தொழிலா ளர் விரோத நடவடிக்கைகளை கண் டித்து ஜூலை 9 திருப்பூர், அவிநாசி, ஊத்துக்குளி, காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம் ஆகிய பகுதிக ளில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என புதனன்று நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவெடுக் கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டம் ஊத்துக்குளி சாலை ஏஐடியுசி மாவட்ட அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிஐடியு கட்டுமான சங்க மாநிலச் செயலாளர் டி.குமார், சிஐ டியு மாவட்ட துணைத் தலைவர் கே .உண்ணிகிருஷ்ணன், ஏஐடியுசி மாநில செயலாளர் என்.சேகர், எல்பிஎப் மாவட்ட துணைத் தலைவர் ரங்கசாமி, எல்பிஎப் சங்கத்தின் சுகாதார சங்க செயலாளர் அறிவழகன், ஐஎன்டியூசி மாவட்டத் தலைவர் வி.ஆர்.ஈஸ்வரன், செயலாளர் செந்தில், எம்.எல்.எப் மாவட்டச் செயலாளர் சக்திவேல், எம்எல்எப் பனியன் சங்க செயலாளர் வெங்கடாசலம், எச்.எம்.எஸ் மாவட்டச் செயலாளர் முத்துசாமி, மாவட்டத் தலைவர் அப்புகுட்டி, ஏஐசிசிடி மாவட் டச் செயலாளர் முத்துகிருஷ்ணன், யூடி யூசி மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், வரும் ஜூலை 9 ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தை பனியன் கம்பெனிகள், டையிங் உள்ளிட்ட தொழிற்சாலைகள், அனைத்து வணிக நிறுவனங்களிலும் பணியாற்றுகிற தொழிலாளர்களையும் பங்கேற்க செய்யும் விதத்தில் மிக விரி வான பிரச்சாரங்கள் மேற்கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 9 ஆம் தேதி திருப்பூர் மத்திய தபால் நிலையத்திற்கு முன்பு சாலை மறி யல் நடத்துவது. அதேபோல் அவிநாசி, ஊத்துக்குளி, காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம் ஆகிய பகுதிகளி லும் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்துவது. மேலும் இது தொடர்பாக குழுக்களை அமைத்து, பிரச்சாரம் மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.