districts

img

வீட்டுமனை பட்டா கேட்டு வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம்

நாமக்கல், செப்.4- வீட்டுமனை பட்டா கேட்டு வாயில் கருப்புத்துணி கட்டி, ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஆவணங்களை ஒப்படைக் கும் நூதன போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர் பாளையத்தை அடுத்துள்ளது சரளைமேடு. இந்தப் பகுதி யில் நெடுஞ்சாலையில் குடியிருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகள் நீதிமன்ற உத்தரவுப்படி  இடிக்கப்பட்டது.  இதனால்,  குடியிருப்புவாசிகள் நீதிமன்ற வழக்கு தொடர்ந்த நிலையில், அவர்களுக்கு வேறு இடம் தர வருவாய் துறைக்கு நீதிமன்றம்  உத்திரவிட்டது. ஆனால், வருவாய் துறையினர் இதுவரை யில் இடம் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு இடம் வழங்க வேண்டி,  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அப்பகுதி யைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் வாயில் கருப்புத்துணி கட்டி, தங்களுடைய ஆதார் மற்றும் ரேசன் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு  அளிக்க அழைத்து சென்றனர்.