கோவை, செப்.27- தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மூலம் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகள் போல சித்தரிப்பது, அவ தூறாக வழக்கு பதிவதாக மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டினார். கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியா ளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கோவையில் கடந்தாண்டு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இஸ்லாமிய குடும்பத்தினரை துன்பு றுத்தி வருகின்றனர். கார் வெடிப்பு சம்ப வத்தை நடத்திய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஆனால், அரபு மொழி பயின்ற முன்னாள் மாணவர்களின் குடும்பங்களை குறி வைப்பதும், அதி காலை நேரத்தில் விசாரணை என்ற பெயரில் இஸ் லாமியர்களை அழைத்து சென்று மக்கள் மத்தியில் இஸ் லாமிய சகோத ரர்களை தீவிர வாதிகள் போல சித்தரிப்பது மிகவும் கண்டிக்கதக்கது. அரபு மொழி பயின்ற முன்னாள், இன்னாள் மாணவர்களின் குடும்பங் களை சோதனை என்ற பெயரில் என்ஐஏ திடீரென சோதனை நடத்துகின்றனர். இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்வா தாரத்தை கேள்வி குறியாக்கி, அவர்கள் வைத்து இருந்த லேப்டாப், ரொக்க பணம் உள்ளிட்டவற்றை கைப்பற்றி யுள்ளனர். குறிப்பாக, அவர்களை தீவிர வாதிகள் என கூறி வீட்டை காலி செய்ய சொல்லி துன்புறுத்தி வருகின்றனர். கோவையை தீவிரவாதிகள் கூடாரம் போல பிம்பத்தை என்ஐஏ உருவாக்கி வருகிறது. மாலேகான் குண்டு வெடிப்பு யார் நடத்தியது, அதை கண்டுபிடித்து, அபினவ் பாரத் இயக்கத்தினர் தான் ரயிலில் குண்டு வெடிப்பை நடத்தியது என நாங்கள் (இஸ்லாமிய அமைப்பு கள்) கண்டு பிடித்து தந்தோம். சிறு பான்மை மக்களின் உணர்வுகளை துன்புறுத்தும், தண்டிக்கும் விதமாக என்.ஐ.ஏ அவதூறாக வழக்கு போட்டு வருகிறது. இதற்கு முன்பே அசாருதீன் என்பவர் எற்கனவே குற்ற வழக்கில் சிறையில் உள்ளார். அவரை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு படுத்து வதும், அரபு மொழி பயிலும் பயின்ற மாணவர்களுடன் தொடர்புபடுத்தி என்.ஐ.ஏ வழக்குப் பதிவு செய்து இருப்பது கண்டிக்கதக்கது என்றார். முன்னதாக இந்த பேட்டியின்போது, தபெதிக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன், ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.