districts

img

பயோ மெட்ரிக் குளறுபடி: பொங்கல் தொகுப்பு வழங்குவதில் சிக்கல்

உடுமலை, ஜன.13- உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிக ளில் கைரேகை பதிவாகாவில்லை என  கூறி நியாய விலை கடை ஊழியர்கள் பொங்கல் தொகுப்பு வழங்க  மறுப்ப தாக வயதானவர்கள் குற்றம் சாட்டியுள் ளனர்.  பொங்கல் பண்டிகையை முன் னிட்டு தமிழக அரசு பொங்கல் தொகுப் பாக ரூபாய் ஆயிரம், பச்சரிசி, கரும்பு  சர்க்கரை உள்ளிடவைகளை தமிழகம்  முழுவதும் வழங்கி வருகிறது. இந்நி லையில் உடுமலை சுற்றுவட்டாரப் பகு திகளில் இவற்றை வாங்க முடியாமல் வயதானவர்கள் சிரமத்திற்கு உள்ளா கின்றனர். கைரேகை பதிவாகாவில்லை என கூறி நியாய விலை கடை ஊழி யர்கள் பொங்கல் தொகுப்பு வழங்க மறுத்து வருகிறார்கள். பொங்கல் தொகுப்பு பெற ஆதார்  சேவை மையம், தாலுகா அலுவலகம்  மற்றும் குடிமைப் பொருள் வட்டாட்சி யரை தினமும் ஆயிரக்கணக்கான வய தானவர்கள் சந்தித்து வருகின்றனர்.  அதிகாரிகள் சொல்லும் ஆலோசனை கள் படி செய்தாலும் கை ரேகை விழுவ தில் மிகப்பெரிய சிரமம் உள்ளது. எனவே, தமிழக அரசாங்கம் உடனடி யாக தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வயதானவர் கள் கோரிக்கை வைத்துள்ளனர், இது குறித்து சிஐடியு நிர்வாகி ஜெக தீசன் கூறுகையில், வயதானவர்க ளுக்கு நியாய விலை கடைகளில் உள்ள  பயோ மெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை விழுவது இல்லை எனக் கூறி  அரசின் திட்ட உதவிகளை வழங்கப்படு வதில்லை. மேலும், முதியோர் உதவித்  தொகை வழங்குவதிலும் சிக்கல் உள்ளது. வங்கி எண் மாறியுள்ளதாக கூறி ஓய்வூதியம் மறுக்கப்பட்டு வருகி றது. இவற்றை தவிர்க்கும் வகையில் அரசு வட்டார அளவில் குறை தீர்ப்பு கூட்டம் மற்றும் சிறப்பு முகாம் நடத்த  வேண்டும், எனக்கூறினார்.  இதுகுறித்து குடிமைப்பொருள் வட்டாட்சியர் கார்த்திகேயனிடன் கேட்ட  போது கை ரேகை பதிவு செய்ய முடியாத வர்களிடம், ஒப்புகை கடிதம் பெற்று  பொங்கல் தொகுப்பு பெற்றுக்கொள்ள லாம் என்றார்.