districts

எல்லைக் கற்களைப் பிடுங்கி தனியார் கல்குவாரி அராஜகம்

திருப்பூர், ஜன. 4 - திருப்பூர் அருகே ஊத்துக்குளி ச.கத்தாங்கண்ணியில் தனியார் கல்குவாரியில் அதிகாரிகள் ஆய் வுக்கு வருவது தெரிந்து, மோசடி யாக நடப்பட்ட எல்லை கற்களைப்  பிடுங்கி அராஜக செயலில் ஈடுபட் டுள்ளனர்.  திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி வட்டம் சர்க்கார் காத்தாங் கண்ணி கிராமத்தில் பழனிசாமி என் பவருக்குச் சொந்தமான கல்குவாரி  செயல்பட்டு வருகிறது. இந்த கல்கு வாரியினால் கடும் பாதிப்புக்கு உள்ளான விவசாயி நடராஜன் என் பவர் உள்ளிட்ட பல்வேறு குடும்பத் தினர் இது குறித்து கடந்த ஓராண் டாக தொடர்ச்சியாக பல முறை புகார்கள் கொடுத்துள்ளனர். விவசாயி நடராஜன் வீடு, இந்த  கல்குவாரியின் மேற்கு புற எல் லைப் பகுதியில் இருந்து (அட் சரேகை தீர்க்க ரேகை அடிப்ப டையில்  சட்டப்படி நடப்பட்ட எல்லை கற்கள்) 150 மீட்டர் தூரத் தில் உள்ளது என திருப்பூர் உதவி  ஆட்சியர்,ஊத்துக்குளி சர்வேயர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் நேரடி கள ஆய்வு செய்து சான்று  வழங்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில வாரத் துக்கு முன்பு ஊத்துக்குளி வட்டார  வளர்ச்சி அலுவலர், குவாரியின் வெளி முனைப் பகுதியில் இருந்து தூர அளவீடு செய்யாமல், குவாரி  உரிமையாளரிடம் பண ஆதாயம் பெற்றுக் கொண்டு, உள்நோக்கத் தோடு, குவாரியின் மையப்பகுதி யில் இருந்து அளவீடு செய்துள் ளார். இதனால் விவசாயி நடரா ஜன் வீடு 335 மீட்டர் தூரத்தில் உள் ளது என பொய் சான்றிதழ் கொடுத் துள்ளார். இது குறித்து டிசம்பர் மாதம்  நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது புகார் கொடுக்கப் பட்டது. இதையடுத்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்,  ஊத்துக்குளி பழனிசாமி கல்குவாரியை கனிமவ ளத் துறை இணை இயக்குனர் நேரடி யாக சென்று அளவீடு செய்து நடவ டிக்கை எடுக்கும்படி உத்தரவிட் டார். இந்த நிலையில் ஜனவரி 4 வியா ழனன்று காலை, பல்வேறு துறை  அதிகாரிகள் குவாரியை பார்வை யிட்டு ஆய்வு செய்து அளவீடு  செய்ய வருவதாக இருந்தது. இதை  முன்னரே தெரிந்து கொண்ட கல் குவாரி உரிமையாளர்கள் வியாழனன்று அதிகாலையில் மேற்கு புறத்தில் நடப்பட்டிருந்த அனைத்து எல்லை கற்களையும் பிடுங்கி லாரியில் ஏற்றி கொண்டு சென்று விட்டனர். சட்டப்படி தூர அளவீடு செய்வதை தடுத்து நிறுத் தும் நோக்கத்துடன் இதைச் செய் துள்ளனர். சட்டப்படி அமைக்கப்பட்டு இருந்த எல்லை கற்களை சட்டவி ரோதமாக பிடுங்கிய கல்குவாரி ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் நட வடிக்கை எடுக்க வேண்டும், விவ சாயி நடராசன் வீட்டிற்கும், மற்ற  விவசாயிகளின் வீட்டிற்கும் குவாரி யில் இருந்து உள்ள தூரத்தை துல்லியமாக அளவீடு செய்து, அவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என சட்டவிரோத கல்கு வாரி எதிர்ப்பு இயக்கத்தினர் கேட் டுக் கொண்டுள்ளனர்.