உதகை, ஆக. 7- பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரி யருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஊட்டி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு இந்த தம்பதிகளின் குழந்தைகள் குன்னூர் பகுதியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 3 மற்றும் 5 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த குன்னூர், அருவங்காடு உபதலை பகுதியைச் சேர்ந்த அப்புசாமி (55), மதிய உணவு இடைவேளையின் போது அந்த 2 குழந்தைகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படு கிறது. தொடர்ச்சியாக அவர் இந்த செய லில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. மேலும், இது குறித்து வெளியில் கூறி னால் கொலை செய்வது விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையே பாலியல் தொந்தர வால் பாதிக்கப்பட்ட அச்சிறுமிகள், தங் களது வகுப்பு ஆசிரியையிடம் தெரி வித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், குழந்தை நல பாதுகாப்பு குழுவினர் அந்த பள்ளிக்கு நேரில் சென்று குழந் தைகளிடம் விசாரணை நடத்தினர்.
இதில் மாணவிகளுக்கு பாலியல் தொந் தரவு செய்யப்பட்டது உறுதியானதால் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் யமுனாதேவி தலைமையிலான போலீ சார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமை ஆசிரியர் அப்பு சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பின்னர் அவர் பிணையில் வெளியில் வந்து விட்டார். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் கடந்த 7 வருடங் களாக நடைபெற்று வந்த நிலையில், திங்களன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், சிறுமிக்கு பாலியல் தொந் தரவு கொடுத்ததற்கு 3 பிரிவுகளின் கீழ் தலா 7 ஆண்டு என மொத்தம் 2 சிறுமிகளுக்கும் சேர்த்து 42 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். மேலும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மாலினி பிரபாகர் ஆஜராகி வாதாடினார். இதைத்தொடர்ந்து பிணையில் வெளியே இருந்த அப்புசாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பாலியல் குற்றச்சாட்டில் கைதான அப்புசாமி ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.