ஈரோடு, அக்.24 அழிந்து கொண்டுள்ள விசைத் தறி தொழிலை காத்திடவும், விசைத் தறி நெசவாளர்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தவும், கூட் டுறவு நெசவாளர்கள் சங்கம் மூலம் அனைத்துத் துறையினரின் சீருடை மற்றும் துணி உபகரணங்களை அரசு உற்பத்தி செய்ய ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக 6 லட்சம் விசைத் தறிகள் மூலம் 30 லட்சம் நெசவாளர் கள் குடும்பங்கள் ஜவுளி தொழிலை நம்பியுள்ளன. விசைத்தறி தொழில் மூலம் நேரடியாகவும் மறைமுக மாகவும் ஒரு கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். தமிழ் நாட்டில் 240க்கும் மேற்பட்ட விசைத் தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங் கள் உள்ளன. 68 ஆயிரம் விசைத் தறிகள் மூலம் தமிழ்நாடு அரசின் வேட்டி, சேலை உற்பத்தி செய்யப் படுகிறது. பள்ளி சீருடைகள் மற்றும் ஓய்வு ஊதியம் திட்டம் மூலம் ஆறு மாதங்களுக்கு மேல் வேலை வாய்ப்பினை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. மீதியுள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத் தறிகளில் மூன்று லட்சத்திற்கு மேல் உள்ள விசைத்தறியில் காடா உற்பத்தி மட்டுமே செய்யப்படு கிறது. காடா உற்பத்தி செய்யும் நெச வாளர்கள் நூல் விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தின் காரணமா கவும், போதிய ஆர்டர் இல்லாத கார ணத்தால் சிரமத்தில் உள்ளனர். அதேபோல் தானியங்கி தறி களின் வருகையால், கூலி அடிப் படையில் அதனோடு போட்டி போட இயலாத நிலையும் உள்ளது. இதனால் விசைத்தறிகளை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நிறுத்தி வைத்துள்ளனர். பாதி உற்பத்தி செய்து வந்த நிலையில் தற்பொழுது நிலைமை மிகவும் மோசமடைந்து விசைத் தறிகளை பழைய இரும்புக்கு விற்கக்கூடிய அவலமான சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். அழிவின் பாதையில் சிக்கி அழிந்து வரும் விசைத்தறி தொழிலை மீட்டெடுப்பதற்காக அரசு பணியில் ஈடுபடும் அனைத்து அரசு ஊழியர்களுக்குமான சீரு டைகளை மற்றும் அரசு சார்ந்த துணி உபகரணங்களை விசைத்தறி கூட் டுறவு நெசவாளர்கள் சங்கம் மூலம் விசைத்தறிகளில் மட்டும் உற்பத்தி செய்ய வேண்டும். அதனை கொள் முதல் செய்து, அனைத்து அரசு பணி யாளர்களுக்கும் வழங்கும் ஒரு திட்டத்தை போர்க்கால அடிப்படை யில் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் பல லட்சம் தொழி லாளர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்திடவும், பல கோடிக்கு மேற்பட்ட விசைத்தறி பணியாளர் களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்வாதாரம் காத்திட வேண்டும். இவ்வாறு தமிழக முதலமைச் சர் நெசவாளர்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தி விடியல் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் சார்பாக தமிழ்நாடு விசைத்தறி சங் கங்களின் கூட்டமைப்பினர் முதல்வ ருக்கு வேண்டுகோள் விடுத்துள் ளனர்.