நாமக்கல், ஜன.24- சிறையில் மாற்றுத்திறனாளி தாக்கப்பட்டு மரணமடைந்தது தொடர்பாக முதல்வரின் கவனத் திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய விசாரணை நடைபெறுவ தாக அதிகாரிகள் உறுதியளித்த தால் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சேலம் மாவட்டம், கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரபாகரன், சேந்தமங்கலம் காவல் துறை விசாரணையில் தாக்கப் பட்டு மரணமடைந்தார். இது தொடர்பான வழக்கை எஸ்.சி, எஸ்.டி வழக்காக மாற்றிட வேண் டும். பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு உரிய நீதியும், நிவாரணமும் அரசு தரப்பில் வழங்கிட வேண் டும் என வலியுறுத்தி அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட் டது. மேலும், இந்த கோரிக்கை களை வலியுறுத்தி திங்களன்று (ஜன.24) ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் படி, திங்களன்று காலை முதல் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் வருவாய் கோட் டாட்சியர் மஞ்சுளா, மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப் போது, இக்கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரின் நேர டியான கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக் கப்பட்டு வருவதாக உறுதியளித் தார். இதைத்தொடர்ந்து, போராட் டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக, இந்த பேச்சுவார்த் தையில் கட்சியின் மாவட்ட செய லாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ. ரங்கசாமி, எம்.அசோகன், ந.வேலு சாமி, ஏ.டி.கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், பெரியசாமி, மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் முருகேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் சிவராஜ், மாண வர் சங்க மாவட்ட தலைவர்கள் தேன்மொழி, சரவணன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.