districts

img

நாமக்கல்லில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி

நாமக்கல், பிப்.3- நாமக்கல்லில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி  நடத்தினர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் டாகூர் உத்தர வின் பேரில், பரமத்தி வேலூர் மாவட்ட  துணை காவல் கண் காணிப்பாளர் ராஜா ரணவீரன் தலைமையில் கொடி அணி வகுப்பு பேரணி நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பாகவும், நேர்மையாகவும், அமைதியாக நடை பெறவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், வன் முறை நடைபெறாமல் இருக்கவும், பொதுமக்கள் பாது காப்பாக வாக்களிக்கும் வகையில் இந்த கொடி அணி வகுப்பு பேரணி நடைபெற்றது.  இந்த பேரணியானது பரமத்தி வேலூர் காவல் நிலை யத்தின் முன்பு இருந்து தொடங்கி அண்ணா சாலை, பள்ளி  சாலை, பழைய பைபாஸ் சாலை வழியாக சென்று நான்கு ரோட்டில் நிறைவுற்றது. இதில், பரமத்திவேலூர் காவல் ஆய்வாளர் வீரம்மாள், பரமத்தி காவல் ஆய்வா ளர் சுரேஷ், வேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.