நாமக்கல், மே19- பள்ளிபாளையம் கொக்கரா யன் பேட்டை ஈஸ்வரன் கோயிலில் தலீத் மக்கள் வழிபடுவதை தடுத்து நிறுத்திய ஆதிக்க சக்தியி னரின் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக போராடிய மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல் துறை தாக்குதல் நடத்தியதால் பர பரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் வட்டம், பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கொக்கரா யன்பேட்டை பகுதியில் உள்ள பிரம்ம லிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த 16 ஆம் தேதி (திங்கள் கிழமை) திருமணம் முடித்து கோயி லுக்குள் வழிபாட்டுக்குச் சென்ற தலீத் மக்களை வழிபாடு செய்ய விடாமல் கோயில் வாசலில் தடுத்து நிறுத்திய ஆதிக்க சக்தியினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன் றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தடுக் கும் வகையில், மார்க்சிஸ்ட் கட்சி யின் ஊழியர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய் னர். குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.பெருமாளை தாக்கி, சட்டையை கிழித்ததுடன் மற்றவர்களையும் கண்மூடித் தனமாக தாக்கி கைது செய்தனர்.