கோவை, மார்ச் 14- முதலாளித்துவத்தை தகர்த்தெ றிந்து, பாட்டாளி வர்க்க ஒற்றுமையை உயர்த்தி பிடிப்போம் என மாமேதை கார்ல் மார்க்ஸின் 140 ஆவது நினைவு தினத்தில் உறுதியேற்கப்பட்டது. உலகின் ஒவ்வொரு காலகட்டத்தை யும் ஆளும் கருத்துக்கள், அதை ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களாகவே இருந் தன. ஆனால், எதிர்காலத்தில் முதலா ளித்துவம் கோலோட்சும் நிலையை பாட் டாளி வர்க்கம் தகர்தெறியும். முதலாளித் துவத்தின் ஒற்றுமையை, பாட்டாளி வர்க் கத்தின் ஒற்றுமையால் மட்டுமே அசைக்க முடியும் என்ற நடைமுறை சமூக விஞ் ஞான தத்துவத்தை, உழைக்கும் வர்க் கத்தின் ஒற்றுமையின் வலிமையை உல கறியச்செய்தவர் மாமேதை காரல் மார்க்ஸ். இவர் மறைந்து 140 ஆண்டுகள் கடந்தும், உலகெங்கிலும் அவருடைய நினைவுகள் போற்றப்படுகின்றன; கொள் கைகள் பின்பற்றப்படுகின்றன. இந்நிலை யில், செவ்வாயன்று மார்க்ஸின் 140 ஆவது நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு அலுவலகத்தில் அனுசரிக்கப்பட் டது. இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், மாவட் டகுழு உறுப்பினர்கள் ஜாகீர், எம்.மூர்த்தி, கிழக்கு நகர செயலாளர் என். செல்வராஜ், அலுவலகச் செயலாளர், எஸ்.ராமசுப்பிரமணியம், அலுவலக கட்சிக்கிளை செயலாளர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்று, காரல் மார்க்ஸ் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம், காவேரி ஆர்.எஸ். பகுதியில் நடை பெற்ற நிகழ்விற்கு, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட உதவித் தலைவர் கே.குமார் தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாவட்ட தலைவர் எம். அசோகன், தத்துவஞானி மார்க்ஸ் குறித்து உரையாற்றினார். இதில், விசைத் தறி தொழிலாளர் சங்க ஒன்றிய செயலா ளர் முத்துக்குமார், பெருமாள், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
மாமேதை கார்ல் மார்க்ஸின் 140 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி, செங்கொடிபுரத்தில் மார்க் ஸின் உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மலரஞ் சலி செலுத்தப்பட்டது. சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநி லக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, ஆர். சிசுபாலன், வி.மாதன், எஸ்.கிரைஸா மேரி, சோ.அருச்சுணன், ஆர்.சின்ன சாமி, நகர செயலாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் என்.கந்தசாமி உட் பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் சிறை தியாகிகள் வளாகத் தில் அமைந்துள்ள மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்து, நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, செயற்குழு உறுப்பினர்கள் பி.ராம மூர்த்தி, எம்.குணசேகரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.குழந்தை வேல், எம்.சேதுமாதவன், மேற்கு மாந கர செயலாளர் எம்.கனகராஜ், வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார் பில், பழைய சூரமங்கலம் பகுதியி லுள்ள சிஐடியு மேக்னசைட் அலுவலகத் தில் மாமேதை மார்க்ஸின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. சங்கத்தின் உதவித் தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சம்மே ளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கட பதி நினைவஞ்சலி உரையாற்றினார். இதில், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பி னர் பி.பாலகிருஷ்ணன், கட்டுமான சங்க தலைவர் சி.மயில்வேலன் மற்றும் சுமைப் பணி கிளை நிர்வாகிகள், தொழிலாளர் கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற, காரல் மார்க்ஸ் நினைவு தினத்திற்கு ஈரோடு நகர செயலாளர் பி. சுந்தரராஜன் தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரி முத்து, எஸ்.சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பெருந்துறையில் சிபிஎம் தாலுகா செயலாளர் பி.முத்து பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விவசாய சங்க தாலுகா தலை வர் கே.குப்புசாமி, மாவட்டக்குழு உறுப் பினர் வி.ஏ.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று மூலப்பாளையம், 60 ஆவது வார்டு, நசியனூர் பகுதி கிளை கள், கடம்பூர் மலை, சின்ன சாலட்டி, விஜ யமங்கலம், சென்னிமலை, கோபி செட்டிபாளையம் மற்றும் சத்தியமங்க லம் உள்ளிட்ட பகுதிகளில் மாமேதை காரல் மார்க்ஸின் நினைவு தினம் அனு சரிக்கப்பட்டது.