districts

img

20ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்த திட்டம்

திருப்பூர், நவ. 27 – தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வா கத்துடன் இணைந்து திருப்பூர் பின்னல் புக்  டிரஸ்ட் நடத்தும் 20ஆவது புத்தகத் திருவி ழாவை சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக் கப்பட்டுள்ளது. 20ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா, 2024ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி முதல்  பிப்ரவரி 04 ஆம் தேதி வரை நடைபெற உள் ளது. இந்த புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் சைமா முன்னாள் பொதுச் செயலாளர் எம்ப ரர் வீ.பொன்னுசாமி தலைமையில் திருப்பூர்  கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் திங்களன்று நடை பெற்றது. இதில், புத்தகத் திருவிழாவை சிறப்பாக  நடத்துவது தொடர்பாக, கடந்த ஆண்டு நடை பெற்ற புத்தகத் திருவிழா அனுபவங்களை முன்வைத்து பின்னல் புக் டிரஸ்ட் சார்பில்  ஆர்.ஈஸ்வரன் பேசினார். இந்த கூட்டத்தில்  புத்தகத் திருவிழா முன்னாள் வரவேற்புக்கு ழுத் தலைர்கள் ஆர்.ஏ.ஜெயபால், மோகன்  கார்த்திக், பிரிண்டிங் குமாரசாமி மற்றும் பின் னல் புக் டிரஸ்ட்டைச் சேர்ந்த கே.காமராஜ், அ. நிசார் அகமது உள்பட பலரும் பங்கேற்று  கருத்துகள் தெரிவித்தனர். இதில் திரளா னோர் கலந்து கொண்டனர். நிறைவாக ராம மூர்த்தி நன்றி கூறினார்.