districts

img

இடுகாட்டை மீட்டுத்தர வலியுறுத்தி மனு

ஈரோடு, செப்.26- பெரிய மடத்துப்பாளையம் பகுதியிலுள்ள இடுகாட்டை மீட்டு தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெரிய மடத்துப் பாளையம் பகுதியில் 5 தலைமுறைகளாக இறந்தவர்களை அடக்கம் செய்து வந்த இடுகாடு பட்டா நிலம் எனக் கூறப்படு கிறது. கடந்த செப்.19 ஆம் தேதி இறந்தவரை அடக்கம் செய்ய  முடியவில்லை. பெரும் போராட்டத்திற்கு பிறகே சாலையில்  அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், பயன்பாட்டிலிருந்து இடுகாடு பட்டா நிலம்  என உரிமையாளர் அளந்து கம்பி வேலி போட்டுள்ளார். எனவே, இடுகாட்டை மீட்டுத்தருமாறு, ஆட்சியர் அலுவல கத்தில் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சி.பரமசிவம், மாவட்டக்குழு உறுப் பினர் வி.ஏ.விஸ்வநாதன் மற்றும் இளங்கோ உள்ளிட்டோர் மனு அளித்தனர்.