திருப்பூர், மார்ச் 6- சாமளாபுரம் பகுதி அருந்ததிய மக் களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் மனு அளிக்கப் பட்டது. திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் கருப்பராயன் கோவில் வீதியில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக் கும் 160 குடும்பங்களுக்கு எண் 445/1ஏ இடத்தில் நத்தம் நிலமாக வகைமாற் றம் செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் கோரிக்கை மனு அளிக்கக்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டக்குழு அலுவ லகத்திற்கு நேரில் சென்று சாமளா புரம் நில உரிமை பாதுகாப்பு இயக்கத் தின் ஒருங்கிணைப்பாளர் கரு.தமிழ ரசன், தவமணி சங்கீதா காளிசாமி மற் றும் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவனத் தலைவர் அ.சு.பவுத்தன், சமூக நீதி கட்சி தலைவர் வழக்குரை ஞர் நா.பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன், நாடாளு மன்ற தொகுதி துணை செயலா ளர் தம்பி முருகானந்தம் உள்ளிட்டோர் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.