districts

img

மனைப்பட்டா, முதியோர் பென்சன் கேட்டு மக்கள் ஆட்சியரிடம் மனு

திருப்பூர், அக்.31- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திங்கட்கிழமை வாராந்திர மக் கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இக்கூட் டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர்  உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை,  சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  659 மனுக்கள் கொடுக்கப்பட்டது.  இதனை பெற்ற மாவட்ட ஆட்சியர் வினீத் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, பொது மக்களின் மனுக்கள் மீது விசா ரணை நடத்தி தீர்வு காண அறிவுறுத்தி னார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர்  ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (பொது) விஜயராஜ், துணை ஆட்சி யர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயி ரநாதன், ஆதிதிராவிடர் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.