திருப்பூர், டிச. 28 - குண்டடம் ஒன்றியம், எல்லப்பாளை யம் புதூர் ஊராட்சி நெழலி கிராமத் தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் குண்டடம் ஊராட்சி ஒன் றிய ஆணையரிடம் மனு அளித்தனர். அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் பொங்கலூர் ஒன்றியக் கமிட்டி சார்பில் புதன்கிழமை இந்த இயக்கம் நடத்தப்பட்டது. எல்லப்பா ளையம் புதூர் ஊராட்சி நெழலி கிரா மத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்க ளுக்கு குடிநீர் வசதி, தெரு விளக்கு, பாதை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய ஆணைய ரிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இவர்களது மனுவைப் பெற்றுக் கொண்ட ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஹரிஹரன், குடிநீர் பிரச்சனைத் தீர அதே பகுதியில் உள்ள கிணற்றில் மின் மோட்டார் வைத்துப் பயன்படுத்த ஏற் பாடு செய்து தருவதாகவும், இருளில் மூழ்கியுள்ள இக்கிராமத்திற்கு 8 சோலார் விளக்குகள் அமைத்து தருவ தாகவும், குடியிருப்புப் பகுதிக்கு அரு கில் உள்ள புதர்களை அப்புறப்படுத்த தேசிய ஊரக வேலைத் திட்டத் தொழி லாளர்களைப் பயன்படுத்த உரிய ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித் தார்.மேற்கண்ட இந்த பணிகளை 25 நாட்களுக்குள் செய்து தருவதாகவும் உறுதி அளித்தார். இந்நிகழ்வில் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எஸ்.சிவசாமி தலைமையில், மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங்கம், ஒன்றியச் செயலாளர் ஜி.சுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலன், தாரா புரம் தாலுகா கமிட்டி உறுப்பினர் ஆர். தாமரைச்செல்வி, கிளைச் செயலாளர் டி.செல்வராஜ் உள்பட பொது மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.