districts

img

சாலையோர வியாபாரத்திற்கு அனுமதி கோரி மனு

ஈரோடு, பிப். 19- ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் சாலையோர வியாபா ரத்திற்கு அனுமதி கோரி சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப் ரமணியன் தலைமையில் வியாபாரிகள், ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து மணிகண்டன் என்பவர் கூறுகையில், சோலார்புதூர் பகுதியைச் சேர்ந்த நான், எலக்ட்ரானிக் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறேன். என்னைப் போன்றே 55 வியாபாரிகள் செருப்பு, சிறு குழந்தைகளுக்கான உடைகள், துணிகள், பொம்மைகள், மீன் தொட்டிகள், பெல்ட், பழைய பாத்திரங்கள் உள்ளிட்ட  பொருட்களை வைத்து மணிக்கூண்டு பகுதியில் விற்பனை செய்து வருகிறோம். ஓவ்வொரு ஞாயிற்றுகிழமையும் காலை 5 மணி முதல் 9.30 மணி வரை சுமார் 4 - 5 மணி  நேர வியாபாரமே எங்கள் வாழ்வாதாரம் ஆகும்.  இவ்வாறு சுமார் 20 ஆண்டுகளாக வியாபாரம் செய்து  வருகிறோம். எங்களை மாநகராட்சி அதிகாரிகள் விரட்டி கடை போட அனுமதி மறுக்கின்றனர். இவ்வாறு திடீரென அனு மதி மறுத்தால் எங்கள் வாழ்க்கை பாதிப்பு ஏற்படும். எனவே  எங்களது வறிய நிலையைக் கணக்கில் கொண்டு பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் கடை வைத்து வியாபாரம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்ததாக தெரிவித்தார். இதேபோல மாநகராட்சி, காவல் கண்காணிப்பாளர், சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் சு.முத்துசாமியிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.