districts

img

மனுக்கள் பெறும் முகாம்

பள்ளிபாளையம், மார்ச் 19- மோடமங்கலம் கிராமத்தில் சனியன்று மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்துள்ள மோடமங்கலம் கிராமத்தில், ஏப்.12 ஆம் தேதி, ஆட்சியர் தலை மையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வையொட்டி முன்னேற்பாடு பணிகளாக பொது மக்களிடம் மனுக்கள் பெரும் முகாமானது சனியன்று நடை பெற்றது. இந்நிகழ்வில், திருச்செங்கோடு வருவாய் கோட் டாட்சியர் கௌசல்யா கலந்துகொண்டு மனுக்களை பெற் றார். மேலும், இந்நிகழ்வில் வேளாண்மை சுகாதாரத்துறை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சி துறை, வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு துறை, கால்நடைத் துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைக ளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொ டர்ந்து தட்கோ திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராள மான மக்கள் முகாமில் பங்கேற்றனர்.