உடுமலை, ஜன.12- சிகிச்சைக்காக நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி வரும் உடு மலை அருகே உள்ள மலைவாழ் மக்கள், சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், மாவட்ட ஆட்சி யர் நேரில் ஆய்வு மேற்கொண் டார். ஆனைமலை புலிகள் காப்ப கம். திருப்பூர் வனக்கோட்டத்தில் உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. உடுமலை வனச்சரகத் தில், குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, பூச்சிக் கொட்டாம்பாறை உள்ளிட்ட 18 மலைவாழ் குடியிருப்புகள் உள் ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற் பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மலைப்பகுதியி லிருந்து மருத்துவம் உள்ளிட்ட அவ சரத் தேவைக்கு சமவெளிப்பகு தியை அடையும் வகையில், வனப் பகுதியில் வழித்தடம் அமைத்து தர வேண்டும் என, பல ஆண்டு களாக மலைவாழ் மக்கள் போராடி வருகின்றனர். அவசர மருத்துவ தேவைக்குக்கூட, அப்பர் ஆழி யாறு, காடம்பாறை வழியாக 60 கி.மீ. தூரம் சுற்றி வர வேண்டி யுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் அவ சர மருத்துவத் தேவைக்கு நோயாளிகளை தொட்டில் கட்டி, கரடுமுரடான பாதையில் சுமந்து வர வேண்டும். இதனால், உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. திருமூர்த்திமலை காண்டூர் கால் வாய் அருகே, பொன்னாலம்மன் கோவில் வரை தொட்டிலில் தூக்கி வந்து எரிசனம்பட்டி ஆரம்ப சுகா தார நிலையம் அல்லது உடுமலை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. கடந்த வியாழ னன்று குழிப்பட்டி மலைவாழ் கிரா மத்தைச் சரவணன் (30) என்பரை பாம்பு தீண்டியுள்ளது. அவரை சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி தூக்கி வந்தனர். இதுகுறித்து மலைவாழ் கிராம மக்கள் கூறுகையில், திருமூர்த்தி மலை பொன்னாலம்மன் சோலை யிலிருந்து, குழிப்பட்டி வரை 6 கி.மீ. தூரத்தில், பாரம்பரிய வழித்தடம் உள்ளது. மலை மேலுள்ள 10க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்க ளுக்கு, இப்பாதை பயன்பாட்டில் இருந்தது. ஆனால், தற்போது பயன்படுத்த முடியாத நிலையி லும், வனத்துறையினர் கட்டுப்பாடு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேலை யில், மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற் றித்தர வேண்டும், என்றனர். இந்த வழித்தடத்தை மேம்படுத்தி, வன உரிமை சட்டப்படி மலைவாழ் மக் கள் குடியிருப்புகளுக்கு எளிதான, சிரமமில்லாத வகையில், நிரந்தர பாதை அமைத்து தர வேண்டும். மழைக்காலங்களில் உடல் நலம் பாதித்தவர்களை சிகிச்சைக்கு அழைத்து வர மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அரசும், வனத்துறை யினரும் மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு செல்ல திருமூர்த்தி மலை, பொன்னாலம்மன் சோலை முதல், குழிப்பட்டி வரை வழித்த டம் அமைத்துத்தர வேண்டும், என்ற னர். இந்நிலையில், உடுமலைப் பேட்டை வட்டம், காட்டுப்பட்டி செட்டில்மெண்ட் பகுதியில் சாலை வசதி குறித்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஞாயிறன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களிடம் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்ட றிந்தார். இந்நிகழ்வில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைத்தலைவரும், தளி பேரூ ராட்சி மன்ற துணைத்தலைவரு மான கோ.செல்வன், மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா, உடுமலை வருவாய் கோட்டாட்சி யர் குமார், உதவி வன அலுவலர் கீதா, வனச்சரகர் மணிகண்டன் மற் றும் அப்பகுதியைச் சேர்ந்த மலை வாழ் மக்கள் பலர் கலந்து கொண்ட னர்.