districts

img

பிரதான சாலைக்கு வந்த வார சந்தை போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

 நாமக்கல், ஆக. 31- குமாரபாளையம் வாரச்சந்தை பிரதான சாலைக்கு  வந்ததால் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக் குள்ளாகி வருகிறார்கள்.   நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வாரச்சந்தை சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்தது. அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால், இடைப்பாடி பிரதான சாலையில் இரு புறமும் சந்தைக்கு வந்த அனைத்து கடைகளும் செயல் பட்டு வருகிறது. ஏற்கனவே குறுகிய சாலையாக இருந்த நிலையில், தற்போது இந்த கடைகளும் போடப்பட்டு உள்ளதால், அவ்வழியே வரும் பேருந்து, லாரி உள்ளிட்ட  வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வரு கிறது. மிக முக்கியமான சாலை என்பதால், ஏராளமான இருசக்கர வாகனங்கள் வந்ததால், போக்குவரத்து பாதித்துள்ளது. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும் என வும், வாரச்சந்தை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வும் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.