districts

img

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர், மார்ச்.2- முறையாக குடிநீர் விநியோகம் செய்ய கோரி பொது மக்கள் காலிக் குடங்களுடன் சின்னக்கரை சாலையில் அமர்ந்து மறியிலில் ஈடுபட்டனர். பல்லடம் அருகே சீரான குடிநீர் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை  மறியலில் ஈடுபட்டனர். பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பா ளையம் ஊராட்சி சபரி நகரில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 15 நாட்க ளாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படு கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித் தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திர மடைந்த மக்கள் காலிக் குடங்களுடன் சின்னக்கரை சாலை யில் அமர்ந்து மறியிலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ  இடத்துக்கு வந்த பல்லடம் காவல் ஆய்வாளர் லெனின் அப்பா துரை, ஊராட்சி நிா்வாகத்தினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சீரான குடிநீா் விநியோ கிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த தையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்ற னர்.