கோவை, டிச.9- சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய காவல் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை கண்காணித்து, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடிக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், கருமத்தம் பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப் பட்டன. இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை தீவிர மாக தேடி வந்தனர். மேலும், இது சம்மந்தமாக தனிப் படை காவல் துறையினர் குற்றம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்தும், தீவிர வாகன தணிக்கை செய்தும் தேடி வந்த நிலையில், வெள்ளியன்று சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத் திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த நபர்கள் சூலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட முபாரக் அலி (29), ஜெகநாதன் (27) மற்றும் சரவணன் (24) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து, பல்வேறு இடங் களில் வீடு புகுந்து கொள்ளையடித்த ரூ.13 லட்சம் மதிப்புள்ள 32 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பணத்தை மீட்பதற்கு உந்துகோளாக இருந்த மாவட்ட காவல் கண் காணிப்பாளரை பாராட்டும் விதமாக பொதுமக்கள் பொன் னாடை போர்த்தி தங்களது நன்றியை தெரிவித்தனர்.