நடனமாடி பேருந்தை வரவேற்ற மக்கள்
உதகை, ஏப்.17- கோத்தகிரி அருகே பழங்குடியின கிராமங்களுக்கு இயக் கப்பட்ட பேருந்தை அப்பகுதி மக்கள் பாரம்பரிய நடனமாடி வரவேற்றனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே குஞ்சப்பனையை யொட்டி கோழிக்கரை, செம்மனாரை, கீழ்கூப்பு உள்ளிட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் அத்தியாவ சிய தேவைகளுக்காக குஞ்சப்பனைக்கு பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வந்தனர். இதனால் பேருந்து வசதி வேண்டும் என பழங்குடியின மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து குஞ்சப்பனையில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்மனாரைக்கு கடந்த மார்ச் 5 ஆம் தேதியன்று அரசு பேருந்து சோதனை ஓட்டம் நடை பெற்றது. அந்த வழித்தடத்தில் போக்குவரத்துக்கு இடையூ றாக இருந்த மரங்கள் அகற்றப்பட்டு, தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டன. தினமும் 3 முறை பேருந்தை இயக்க போக்குவரத்துத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், ஞாயிறன்று சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் கோத்தகிரி பேருந்து நிலையத்திலிருந்து செம்ம னாரைக்கு அரசு பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அந்த பேருந்து செம்மனாரை சென்ற தும், கிராம மக்கள் தங்களது பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்த னர்.
கோவையில் 45 நாட்கள் அரசு பொருட்காட்சி
கோவை, ஏப்.17- கோவையில் 45 நாட்களுக்கு அரசு பொருட்காட்சி நடை பெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரி வித்தார். கோவை மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசுகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கோவை மாவட்டத்தில் செய்தி, மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசு பொருட்காட்சியானது கோவை மாநகராட்சி, சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் ஏப் ரல் மாதம் இறுதியில் தொடங்கப்பட்டு, 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த பொருட்காட்சியில் செய்தி, மக்கள் தொடர்புத்துறை உட்பட 27 அரசு துறைகள் சார்பில் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாடு மின்வாரியம் உள்பட 7 அரசு சார்பு நிறுவனங் களும் பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளன. பொருட்காட்சியில் சிறப்பாக அரங்குகள் அமைக் கும் துறைகளின் அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும் வழங் கப்பட உள்ளது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் பரிசுகள் வழங்க உள்ளனர். மேலும், கோடை காலத்தை பயனுள்ளதாக கழிக் கும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய பல் வேறு விளையாட்டு சாதனங்களும், வீட்டு உபயோக பொருட் களுடன் கூடிய பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப் பட உள்ளது. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடைபெற உள்ளது, என்றார்.
மதுக்கூட உரிமையாளர் மீது தாக்குதல்
4 வாலிபர்கள் கைது
கோவை, ஏப்.17- டாஸ்மாக் மதுக்கூடம் முன்பு நின்று பேச வேண்டாம் என சொன்ன மதுக்கூட உரிமையாளரை பின்தொடர்ந்து தாக்கிய சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன், இவர் அப்பகுதியில் டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரது டாஸ்மாக் கடை முன்பு 7 பேர் நின்றுகொண்டு சத்தமாக பேசி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து இளங்கோவன் இங்கு நின்று பேச வேண்டாம், கலைந்து செல்லுங்கள் என இயல்பாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர்கள் ஏழு பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்து இளங்கோவன் டாஸ்மாக் மதுக்கூடத்தை மூடி விட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற ஏழு பேர் அவரை ஒரு இடத்தில் சுற்றி வளைத்து தகாத வார்த்தைகளால் திட்டி ஹெல்மெட், கற்கள், மரக்கட்டைகளால் தாக்கி விட்டு சென்றுள்ளனர். பிறகு இளங்கோவன் சிகிசைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த பீளமேடு காவல்துறையினர், சம்பவத்தில் ஈடுபட்ட வீரபாண்டி(22), தீபக் (21), ஹரிஹரன்(21), வைஷால்(23) ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மகேஷ்ராஜ், வசந்தகுமார், சரவணன் ஆகிய மூவரை தேடி வருகின்றனர்.
புதிய கடைகள் கட்ட ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு உதகை மார்க்கெட்டில் தலைமை பொறியாளர் ஆய்வு
உதகை, ஏப்.17- உதகை மார்க்கெட்டில் வாகன நிறுத் தும் வசதியுடன், புதிதாக கடைகள் கட்ட ரூ.18 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உத்தரவிட்ட நிலையில், இத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து, சென்னை தலைமை பொறியாளர் உதகை மார்க்கெட்டில் நேரடியாக ஆய்வு மேற் கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட் ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக் கோஸ் போன்ற காய்கறிகள் அதிக அள வில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்ப னைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வரு கிறது. உதகை மற்றும் சுற்றுப்புற பகுதி களில் காய்கறிகளை அறுவடை செய்த பின்னர் சிறு, குறு விவசாயிகள் உதகை நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டி ளுக்கு விற்பனைக்காக கொண்டு வரு கின்றனர். அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கின்ற னர். சுமார் 150 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டமைக் கப்பட்ட உதகை நகராட்சி சந்தை இந்தி யாவின் முன்னோடி மாதிரி சந்தையாக கருதப்பட்டது. இங்கு 1500 நிரந்தர வியா பாரக் கடைகளும், 500 தற்காலிக வியா பாரக் கடைகளும் உள்ளன. இந்த சந் தைக்கு தினமும் 3500 முதல் 4000 வாடிக் கையாளர்கள் வந்து செல்கின்றனர். மேலும், வார இறுதி நாட்களில் 4000 முதல் 5000 வாடிக்கையாளர்கள் வரு வார்கள். இந்நிலையில், உதகை மார்க்கெட் டில் கடந்த சில வருடங்களாக அடிப் படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத் தாததால், மழை காலங்களில், மார்க் கெட்டில் ஆறு போல் வெல்லம் ஓடு கிறது.
மேலும், வாகன நிறுத்தம் இல்லா தது, சுகாதாரமின்மை என பல்வேறு குறைபாடுகள் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது மார்க் கெட்டில் அடிப்படை வசதிகளை மேம்ப டுத்தி, புதிய கடைகள் கட்ட ரூ.18 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள் ளது. இதனையடுத்து, சென்னை நக ராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத் தில் இருந்து தலைமை பொறியாளர் நட ராஜன் உதகை மார்க்கெட்டுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது அவ ரிடம் உதகை நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உள்பட அதிகாரிகள் இருந்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகை யில், ஊட்டி மார்க்கெட்டில் உள்ள 190 கடைகளை முழுவதுமாக இடித்து விட்டு, புதிதாக நவீனவசதியுடன்கூடிய 231 கடைகள், 2 பொதுக்கழிவறைகள், ஏடிஎம் மையம், உணவகம், காத்தி ருப்பு அறை ஆகியவை கட்டப்பட்ட உள் ளன. இந்த கடைகளின் மேல்தளத்தில் 137 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 200 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ரயில் மோதி வாலிபர் பலி
கோவை, ஏப். 17- கோவை, கவுண்டர் மில் அருகே உள்ள தண்டவாளத் தில் வாலிபர் ஒருவர் சடல மாக கிடந்தார். இதனைப் பார்த்த அந்த வழியாக சென் றவர்கள் ரயில்வே போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என்பன போன்ற விவரம் கிடைக்கவில்லை. அவர் அந்த வழியாக சென்ற ரயில் மோதி பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகு றித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மீது வழக்கு
கோவை, ஏப்.17- கோவையில் நடைபெற்ற பேரணியின்போது, நிபந்தனை களை மீறிய ஆர்எஸ்எஸ் தலைவர்கள் 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறி சிலம்பாட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக கோவை மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் சுகுமார், மாவட்ட செயலாளர் முருகன், இணைச்செயலாளர் குமார் ஆகிய 3 பேர் மீது வெரைட்டிஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை
கோவை, ஏப்.17- தடாகம் அருகே விவசாயி ஒருவர் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை அங்கிருந்த அறையின் கதவை உடைத்து சேதப்படுத்திய கண்காணிப்பு கேமரா காட்சி கள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம், பன்னிமடை அருகே உள்ள வரப் பாளையம் பிரிவு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை, விவசாயி கணேசன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்துள் ளது. அப்போது, அங்கிருந்த தோட்டத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த மாட் டுத் தீவனங்களை உண்ண முயன்ற நிலையில், முழுமை யாக உள்ளே நுழைய முயலாததால், எட்டியவரை வைக்கப் பட்டிருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. இவை அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதி வாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள் ளது. கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், உணவு தேடி காட்டுயானைகள் எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் நுழையக்கூடும் என்பதால், வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய ஊரக திறனாய்வு தேர்வு மாநில அளவில் தருமபுரி 5 இடம் பிடித்தது
தருமபுரி, ஏப்.17- கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கான தேசிய ஊரக திறனாய்வு தேர்வில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 298 மாணவ, மாணவி கள் வெற்றி பெற்று மாநில அளவில் 5 ஆவது இடத்தை பிடித்தனர். 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவி கள், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 4 ஆண்டுகளுக்கு மாதந்தோ றும் தலா ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்கு தேசிய ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கான மாணவ, மாணவிகளை தேர்வு செய்வதற்கான தேசிய ஊரக திறனாய்வு தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வை தரும புரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 6 ஆயிரத்து 300 மாணாக் கர்கள் எழுதினர். இந்தத் தேர்வை சிறப்பாக எழுத தயார்படுத்தும் வகையில் கல்வித் துறை சார்பில் 23 மையங்களில் சிறப்பு பயிற்சி கள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், தேசிய ஊரக திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியானது. தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 298 மாணவ, மாணவி கள் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் எண் ணிக்கை அடிப்படையில் தருமபுரி மாவட்டம் மாநில அளவில் 5 ஆவது இடத்தை பிடித்துள் ளது. குறிப்பாக, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவி கள் இந்த தேர்வில் அதிகளவில் வெற்றி பெற்று கல்வி ஊக்கத்தொகையை பெற தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் பாராட்டு தெரிவித் தார்.
மூதாட்டியிடம் நகை பறித்த இளம்பெண்
கோவை, ஏப்.17- பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மூதாட்டி யிடம் நகை பறித்த இளம்பெண்ணை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கோவை பாப்பநாயக்கன்பாளையம் ரங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சாந்தாமணி(69). இவர் ஞாயி றன்று, பேருந்தில் ஒப்பணக்கார வீதிக்கு வந்தார். பின்னர் அங் கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக பிரகாசம் பேருந்து நிறுத் தத்தில் நின்றிருந்தார். அப்போது அவரது பின்னால் நின்றி ருந்த இளம்பெண் ஒருவர் நைசாக சாந்தாமணி கழுத்தில் அணிந்திருந்த 1.5 பவுன் தங்க செயினை பறித்து தப்பி செல்ல முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சாந்தாமணி அதிர்ச்சியில் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் நகை பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை மடக்கி பிடித்து கடைவீதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், மூதாட்டியிடம் நகை பறித்தது கோவை எஸ்ஐஎச்எஸ் காலனியை சேர்ந்த அம்மாச்சி ஈஸ்வரி (33) என் பது தெரியவந்தது. அவரிடம் இருந்த நகை பறிமுதல் செய் யப்பட்டது. பின்னர் போலீசார் இளம்பெண்ணை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கால்பந்து விளையாட்டு பயிற்சி பெற சிறுவர்கள் ஆர்வம்
உதகை, ஏப்.17- கால்பந்து விளையாட்டு பயிற்சி பெற சிறுவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால் பயிற்சியாளர்கள் தெரி வித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நக ரின் மையப்பகுதியில் காந்தி மைதானம் உள்ளது. நீலகிரி மாவட்ட கால்பந்து கழகத்தில் பதிவு செய்துள்ள அணிக ளுக்கு இடையே லீக் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடை பெற்று வருகிறது. மேலும், தனியார் கால்பந்து அகாடமிகளிலும் இணைந்து சிறுவர்கள் தகுதி பெற்ற பயிற்சியாளர் களிடம் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர். காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் சிறுவர்களுக்கு கால் பந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகி றது. மேலும். காலையில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கால்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாடி வரு கின்றனர். இதனால் கோத்தகிரி காந்தி மைதானம் கால்பந்து வீரர்கள் மற்றும் சிறுவர்களால் களைகட்டி காணப்படு கிறது. இதுகுறித்து பயிற்சியாளர்கள் கூறு கையில், கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற சிறுவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவர்கள் விடு முறை நாட்களில் செல்போன் பயன்பாடு மற்றும் தீய செயல்களில் ஈடுபடாமல் இருப்பதுடன், அவர்களின் விளையாட்டு திறமை, ஆரோக்கியம் மேம்படும், என் றனர்.
கோடை வறட்சியால் தீவன தட்டுப்பாடு: விவசாயிகள் கவலை
கோவை, ஏப்.17- கோடை வறட்சியால் கால்நடைக ளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ள தால் விவசாயிகள் கவலை அடைந்துள் ளனர். கோவை மாவட்டம், நெகமம் மற் றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கடந்த 20 ஆண்டு களுக்கு முன்பு நெகமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மண் பாதைகள் அதிகள வில் இருந்தன. இதனால் பாதை ஓரங் களில் புல், அருகம்புல் மற்றும் இதர செடிகள் அதிகளவில் வளர்ந்து இருந் தது. இதுதான் கால்நடைகளுக்கு தீவ னங்களாக இருந்தன. மேலும், விவசாயி கள் தங்களது கால்நடைகளை காடுகள், விளைநிலங்கள், திறந்த வெளி பகுதி களில் மேயவிடுவதால் அங்கு வளர்ந்து இருக்கும் பச்சை பசேலான புற்களை தின்று வந்தன. இதன் மூலம் விவசாயி கள் தங்களது கால்நடைகளுக்கு ஓரளவு தீவனத்தேவையை ஈடுகட்டி வந்தனர். ஆனால், தற்போது சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால், அதன் ஓரங்க ளில் சிறு செடிகள் வளர்வது இல்லை. மேலும், பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததும், தற்போது கோடை வெயில் வறட்சி காரணமாக விளைநிலங்கள், காடுகளில் புற்கள் உள்ளிட்ட இதர செடி கள் வளர்ச்சி இல்லை. அப்படியே புற் கள் இருந்தாலும் அவைகள் காய்ந்து கருகிய நிலையில்தான் உள்ளது. இத னால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது.
பட்டுக்கூடு ஏலம்
தருமபுரி, ஏப்.17- தருமபுரி பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட் டங்களில் இருந்து விவசாயி கள் பட்டுக்கூடுகளை விற்ப னைக்கு கொண்டு வருகின்ற னர். இந்த அங்காடிக்கு ஞாயி றன்று 2,813 கிலோ பட்டுக் கூடுகள் விற்பனைக்கு வந் தன. இதில், அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.578க்கும், குறைந்தபட்சமாக ரூ.343க் கும், சராசரியாக ரூ.473.89க் கும் விற்பனையானது. மொத் தம் ரூ.13 லட்சத்து 33 ஆயி ரத்து 93க்கு விற்பனையானது.