districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வானத்தில் பயங்கர வெடிச்சத்தம் ஏற்படுத்திய மர்மப்பொருள்: மக்கள் அதிர்ச்சி

தாராபுரம், ஜூன் 23 - தாராபுரம் வட்டார பகுதியில் வானத்தில் மர்மப்பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது .அந்த பயங்கர வெடிச் சத்தத்துடன் வானத்தில் பெரும்  புகை மண்டலம் ஏற்பத்தி  பல கிலோமீட்டர் தூரம் அதிர்வலையை ஏற்படுத்தியதால் மக் கள் பீதியடைந்தனர். தாராபுரம் பகுதியில் வியாழனன்று காலையில் சுமார் 11  மணியளவில் வானத்தில் மர்மப்பொருள் ஒன்று வெள்ளை  நிறத்தில் புகையை கக்கி கொண்டு வட்டமிட்டது. சில நிமிடத் தில் பயங்கர வெடி சாதத்துடன் வெடித்தது போலவும், இத னால் வானத்தில் அடர்த்தியான வெண்புகை சூழ்ந்து கொண்டது. இந்த வெடிச் சத்தம் தாராபுரம் சுற்றுவட்டாரம் மட்டுமின்றி காங்கேயம், வெள்ளகோவில், கரூர் உள்ளிட்ட பகுதியில் பொதுமக்களிடையே உணரப்பட்டது. இதனால் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், வீடு  மற்றும் கட்டிடத்தில் தங்கி இருந்தவர்கள் பூகம்பம் ஏற்பட்டது போல அதிர்ச்சி அடைந்தனர். சிலர் உயிருக்கு பயந்து பீதிய டைந்து, வீட்டை விட்டு வெளியேறி சுற்று வட்டார பகுதியை  பார்த்த பின்புதான் நிம்மதியடைந்தனர்.  இதுகுறித்து தாரா புரம் பகுதி மக்கள் கூறுகையில், வானத்தில் ஜெட் விமானம்  ஒன்று அதிக ஒலி  சத்தத்துடன் வட்டமிடுவது போல ஒரு மர்மப் பொருள் வானத்தில் பறந்தது. அப்போது அந்த சத்தம் மின் னலை விட 10 மடங்கு அதிக அளவு கேட்டதாகவும் பயங்கர  சத்தத்துடன் வெடித்ததாகவும் கூறினர். இதனால் தாராபுரம் வட்டார பகுதி மக்கள் பூகம்பம் தான் ஏற்பட்டுள்ளதா? என பயந்து வீட்டைவிட்டு வெளியேறினர். பிறகு வானத்தை நோக்கி பார்த்தபோது வானவில் போன்ற மிகப்பெரிய தோற் றத்தில் புகை மண்டலமாக வானத்தில் தென்பட்டது.  இந்த  வெடிச்சத்தம் ஜெட் விமானம் சத்தமா? அல்லது மர்ம பொருள்  ஏதாவது வானத்தில்  வெடித்ததா? என்று தெரியவில்லை.  மேலும் இதுபோல கடந்த ஆண்டும் வானத்தில் இந்த  தோற்றம் காணப்பட்டதாக சிலர் தெரிவித்தனர். இதனால்  மக்களிடம் பெரும் அச்சத்தை கிளப்பியுள்ளது.

தாராபுரத்தில் 3 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல் குடிமகன்கள் அதிர்ச்சி; பொதுமக்கள் மகிழ்ச்சி

தாராபுரம், ஜூன் 23 - தமிழ்நாடு அரசு  கடந்த ஏப்.20 ஆம் தேதி அரசு ஆணை எண்  140-ன்படி ஜூன் 22 முதல் தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடை யூராக செயல்பட்டு வரும் 500 மதுபானக் கடைகள் மூடப்படும்  என அறிவித்தது. அதைத் தொடா்ந்து வியாழனன்று தமிழகம்  முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த  டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டது. அதில்  தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வந்து 16 டாஸ்மாக் கடைக ளில் 3 கடைகள் மூடப்பட்டன. தாராபுரம் 5 கார்னரில் உள்ள  ஒரு கடை, சந்தைபேட்டை மற்றும் போலீஸ் நிலையம் அருகே  உள்ள கடைகள் மூடப்பட்டன.  இதுகுறித்து மதுபானப் பிரியர் கூறுகையில், தமிழக அர சின் உத்தரவையடுத்து தாராபுரத்தில் உள்ள 3 டாஸ்மாக்  கடைகள் மூடப்பட்டுள்ளது. எங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனால் மதுபானம் வாங்க பக்கத்தில் உள்ள வேறு  கடைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் கூட்ட நெரி சல் ஏற்படும் என்றார்.  அதேசமயம் இப்பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது,  மதுபானக் கடைகள் மூடப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.  5 கார்னரில் உள்ள கடை அருகில் அருகருகே 2 கடைகள்  செயல்பட்டு வந்தது. இதனால் அங்கு கடை திறப்பது முதல்  மது அருந்திவிட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி  வந்தனா். மேலும் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மது பானம் அருந்திவிட்டு படுத்து தூங்குவர். இதனால் பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் வந்து நிற்க பயந்து வந்தனர். சந்தை  பேட்டை மற்றும் காவல் நிலையம் பகுதியிலும் குடியிருப்பு,  பள்ளி, அரசு கல்லூரி உள்ளது. இதனால் அங்கு மது அருந்தி விட்டு சுற்றித் திரிவோரால் பலரும் பாதிக்கப்பட்டனர். எனவே  கடை மூடல் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இது போன்று படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைத்து மதுவில்லா தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும், என்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை:  போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

திருப்பூர், ஜூன் 23- திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வரை போக்சோ சட்டதின் கீழ் தெற்கு மகளிர் காவல்துறையி னர் கைது செய்தனர். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சூரியகுமார் செரங் காடு பகுதியில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  அவர் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக  ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று ஒட்டன்சத்திரம் பகு தியில் உள்ள விடுதியில் தங்க வைத்து பாலியல் தொந்தரவு  கொடுத்திருக்கின்றார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்  புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஒட் டன்சத்திரம் விரைந்து சென்று சூரியகுமாரையும், சிறுமியை யும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் சூரிய குமாருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று குழந்தை இருப்பதும்,  சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று விடுதி யில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தெற்கு மகளிர் காவல்  துறையினர் சூரியகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது  செய்தனர்.

ஆளுநர் ரவியை வெளியேற்ற மதிமுக கையெழுத்து இயக்கம்

திருப்பூர், ஜூன் 23 - ஆளுநர் ரவியை தமிழ் நாட்டை விட்டு வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் கையெழுத்துப் பெறும் நிகழ்வு திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுக  செயலாளர் நாகராஜ் தலை மையில் ரயில் நிலையம் முன்பு வெள்ளியன்று நடை பெற்றது.  இதில் அக்கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத் தார். இதைத்தொடர்ந்து.பொதுமக்களிடம் கையெ ழுத்து பெற்றனர். தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் ரவியை  வெளியேற்ற வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு மதிமுக பொதுச்  செயலாளர் வைகோ கையெ ழுத்து இயக்கத்தைத் தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

6 பள்ளி வாகனங்களுக்கு அபராதம்

உதகை, ஜூன் 23- பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இயக் கப்படும் தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தகுதி குறித்து  வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த மே மாத இறுதியில் பள்ளி கள் திறப்பதற்கு முன்னதாக உதகை மோட்டார் வாகன அலுவலகத்திற்கு உட்பட்ட  கோத்தகிரி, குன்னூர், கூடலூர், உதகை உள் ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி வாகனங் களின் தகுதிகள் குறித்து வட்டார போக்கு வரத்து அலுவலர் தியாகராஜன் தலைமை யில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயா மற்றும் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை,  காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழு வினர் ஆய்வு செய்தனர்.  அப்போது விதிகளை மீறி கேமராக்கள் பொருத்தாமல் 6 தனியார் பள்ளிகளின் வாக னங்கள் இயக்கப்படுவது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து அந்த வாகனங்க ளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், உடனடியாக கேமராக்கள் பொருத்தி, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

டாஸ்மாக் கடைகள் மூடல்

சேலம், ஜூன் 23- சேலம், கோவையில் உள்ள 37 டாஸ்மாக் கடை கள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டமன்றத் தில் மானிய கோரிக்கையின் போது 500 டாஸ்மாக் கடை கள் மூடப்படும் என தெரிவிக் கப்பட்டிருந்தது. இந்நிலை யில், சேலம் மாவட்டத்தில் 211 டாஸ்மார்க் மதுபான கடைகள் உள்ளன. இதில் 17 கடைகள் மூடப்பட்டன.  இதேபோன்று, கோவை  மாவட்டத்தில் வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டத்தில் தலா பத்து கடைகள் என 20 கடைகள் மூடப்பட்டன. 

தரமற்ற முறையில் சாலை அமைப்பு

தருமபுரி, ஜூன் 23- தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பிரசித்தி  பெற்ற சுற்றுலா தலமான ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தின மும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர். இந்நிலையில், ஒகேனக்கல்லில் உள்ள ஊட்டமலை பகுதி யில் போதிய சாலை வசதிகள் இல்லாமல் இருந்தது. ஊட்ட மலை பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற் றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் பாதை யில் போடப்பட்டு வரும் சிமெண்ட் சாலை, தரமற்றதாகவும், உடைந்து சிதறும் நிலையிலும் சாலை முழுவதும் விரிசல்கள் விட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் குடிநீர் குழாய் அமைந் துள்ள இரும்பு குழாய்கள் மீது சிமெண்ட் சாலை போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பாக ஒப்பந்த தாரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதி காரிகள் வந்து பார்வையிட்டு சிமெண்ட் சாலையின் தரத்தை  பரிசோதித்த பின்பு சிமெண்ட் சாலை போட வேண்டும் என்று வார்டு உறுப்பினர்களும், ஊர் பொதுமக்களும் பணியை தடுத்து நிறுத்தி வைத்தனர். அப்போது அங்கு சிமெண்ட் கல வையுடன் வந்த வாகனத்தை அப்பகுதி பொதுமக்கள் திருப்பி அனுப்பினர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுக் கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த அதிகாரிகளும் ஆய்வு செய்ய வரவில்லை என் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப் பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இரும்பு குழாய் உடைந்து, புதிதாக போடப்பட்ட தரமற்ற சாலை பிளந்து தண்ணீர் அதன் வழியாக வெளியேறுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, ஜூன் 23- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவ சாயிகள் பட்டுக்கூடுகளை விற் பனைக்கு கொண்டு வரு கின்றனர். இந்த அங்காடிக்கு வியாழனன்று 965 கிலோ பட்டுக்கூடு கொண்டு வரப் பட்டன. இதில், ஒரு கிலோ  பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.470க்கும், குறைந்தபட் சமாக ரூ.315க்கும், சராசரி யாக ரூ.405.66க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்து 804க்கு வர்த்தகம் நடைபெற்றதாக ஏல அதிகாரிகள் தெரிவித்த னர்.

மாணவர் சேர்க்கை இல்லாததால் அரசுப்பள்ளி மூடல்

உதகை, ஜூன் 23- மாணவர் சேர்க்கை இல்லாததால் உதகை அருகே உள்ள பார்சன்ஸ்வேலி அரசுப்பள்ளி மூடப்பட்டதால், கல்வியா ளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள பார்சன்ஸ்வேலி பகுதியில் கடந்த 1961 ஆம் ஆண்டு நீர்மின் உற்பத்திக்காக அணை கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் நோக்கத்தில் 1962 ஆம் ஆண்டு 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட் டது. அப்போது அப்பள்ளியில் 200க்கும் மேற்பட்டோர் படித்து வந்தனர். மேலும், 7 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர். காலப்போக்கில் அங்கு மின்வாரியத் தில் பணியாற்றியவர்கள், ஓய்வு பெற்றோ அல்லது பணியிட மாறுதல் பெற்றோ  சென்றதால், அப்பள்ளியில் படிக்கும்  மாணவர்கள் எண்ணிக்கை படிப்படி யாக குறைய தொடங்கியது. தற்போது 30க்கும் குறைவாக குடும்பங்களே அப் பகுதியில் வசித்து வருகின்றனர். இத னால் கடந்த 10 ஆண்டுகளாக மாணவர் கள் எண்ணிக்கை 10 என்ற அளவிலேயே இருந்து வந்தது. தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டும் பணி யாற்றி வந்தனர். இதற்கிடையில், கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் படித்து வந்த 4 மாண வர்களும் தேர்ச்சி பெற்று உயர் கல் விக்கு சென்று விட்டனர். இதனால் 2022-23 ஆம் கல்வியாண்டில் மாணவி ஒருவர்  மட்டும் 1 ஆம் வகுப்பில் சேர்ந்தார். தலைமை ஆசிரியர் மட்டும் அந்த மாண விக்கு பாடம் நடத்தி வந்தார். இந்நிலை யில், ஒரே ஒருவராக படித்து வந்த அந்த  மாணவி தேர்ச்சி பெற்று 2 ஆம் வகுப் பிற்கு வேறு பள்ளிக்கு சென்று விட்டார். வேறு மாணவர்கள் யாரும் சேராத நிலை யில், நடப்பு கல்வியாண்டில் பார்சன்ஸ் வேலி அரசு தொடக்கப்பள்ளி மூடப்பட் டது. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.