districts

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

ஈரோடு, ஜன.24- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனச் சரகத்திற்கு உட்பட்ட அரியப்பம்பாளையம் பகுதியில் ஞாயிறன்று இரவு 9 மணி அள வில் டீக்கடையின் முன்பு ஒருவர் நின்று  கொண்டிருந்தார். அப்போது வனப்பகு தியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று,  அந்த நபர் கண்முன்னே பாய்ந்து ஓடியுள் ளது.  இதை பார்த்து, அந்த நபர் அலறி கூச்ச லிட்டார். இதையடுத்து அப்பகுதியில் திரண்ட  மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத் திற்கு  வந்த வனத்துறையினர், அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி  செய்தனர். இதைத்தொடர்ந்து, அரியப்பம்பா ளையம் பகுதி பொதுமக்கள் மிகுந்த கவனத் துடனும், இரவு நேரங்களில் தேவையில்லா மல் வெளியே செல்ல வேண்டாம் எனவும்  வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்கா ணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால் கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக் கப்படும் என வனத்துறையினர் தெரிவித்த னர்.