திருப்பூர், நவ.18- திருப்பூர் ச.பெரியபாளையம் அருகே குளத்துப்பாளையம் பகுதியில் 23 நாட்களாக குடிநீர் விநியோகம் செய் யப்படாததால் மக்கள் வெள்ளியன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ச.பெரியபாளையம் ஊராட்சிக்குட் பட்ட குளத்துபாளையம் பகுதியில் கடந்த 23 நாட்களாக குடிநீர் விநியோ கம் செய்யப்படவில்லை. இதனால் ஆத் திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் திருப்பூர் ஊத்துக்குளி பிரதான சாலையில் வெள்ளியன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக் குளி போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மறியலைக் கைவிட வலியுறுத்தினர். உரிய அலுவலர்கள் வாக்குறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என மக்கள் உறு திபடக் கூறி மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு ச.பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் வந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் னர். இதைத் தொடர்ந்து சாலை மறி யல் போராட்டம் கைவிடப்பட்டது.