கோவை, பிப்.3- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கோவை மாவட் டக்குழுவின் சார்பில் முப்பெரும் விழா திங்களன்று நடைபெற்றது. கோவை தாமஸ் கிளப், அரசு ஊழி யர் சங்க கட்டிடத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம், தோழர் கே. வேலுசாமி படத்திறப்பு மற் றும் புதிய இசைக் குழு துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற் றது. இந்நிகழ்விற்கு, மாவட்டத் தலை வர் எஸ்.மதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.அருணகிரி துவக்க உரையாற்றினார். மாநில துணைத் தலைவர் என். அரங்கநாதன், தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய் வுதியர் சங்க மாநிலத் தலைவர் கே.பழ னிச்சாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ப.செந்தில் குமார், மாவட்டத் தலைவர் ச.ஜெகநா தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக, ஓய்வூதியர் சங்கத்தின் முன்னணி பணியாளராக சங்கத்தை கட்டியெழுப்புவதிலும், செயல்பாடுக ளிலும் முக்கிய பங்காற்றிய தோழர் கே.வேலுசாமி படத்திறப்பு விழா நடைபெற்றது. அவரது உருவப் படத்தை மாநில துணைத் தலைவர் என். அரங்கநாதன் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் திரளா னோர் பங்கேற்றனர்.