சேலம், ஆக.6- ஓய்வூதியர்கள் அனுப்பும் விண்ணப்பங்கள் மீது முடிவுகள் எடுப்பதில் காப்பீட்டு நிறுவனம் காலதாமதம் செய்யவதாகக்கூறி அனைத்துறை ஓய்வூதியர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். புதிய சுகாதாரத் காப்பீடு திட்டத்தின் கீழ், ஓய்வூதியர்கள் அனுப்பிய கோரிக்கை விண்ணப் பங்களின் மீது முடிவுகள் எடுப் பதில் காப்பீட்டு நிறுவனம் காலதா மதம் செய்து வருகிறது. சிகிச்சை மேற்கொள்ள கோரப்படும் தொகைக்கும், காப்பீடு நிறுவனம் வழங்கும் தொகைக்கும் எந்த பொருத்தமும் இல்லாமல், மிகக் குறைவான தொகையே வழங்கப் படுகிறது. முழுமையான பணம் இல்லாத சிகிச்சை என்பது மறுக் கப்பட்டு வருகிறது. கோரிக்கை மனுக்கள் எந்த அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது என்பதை கண்டறிய வலைத்தளம் உரு வாக்கப்படவில்லை. புதிய சுகா தார காப்பீட்டு திட்டத்தின் அனைத்து குறைபாடுகளையும் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ் நாடு அரசு அனைத்துத்துறை ஓய் வூதியர் சங்கத்தினர் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் கோட்டை மைதா னத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எ.நடராஜன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆர்.சுப்பிரமணியம், மாவட்டச் செய லாளர் சி.ராஜ்குமார், பட்டு வளர்ச் சித்துறை ஓய்வூதியர் சங்க பொதுச்செயலாளர் பி.கோவிந்த சாமி, அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூ தியர் சங்க மாநில துணைச்செய லாளர் கே.ஆர்.கணேசன் உட்பட திரளானோர் கலந்து கொண்ட னர். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் எம்.கோபால், பொருளாளர் கே.கேச வன், துணைத்தலைவர் எம்.கார்த் திகேயன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இதில் மின்வாரிய ஓய்வூதியர் அமைப் பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் டி.பாஸ்கரன், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புக ழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் எஸ்.மதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே. அருணகிரி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் என்.அரங்கநா தன் சிறப்புரையாற்றினார். தமிழ் நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை அலுவலர் சங்க முன்னாள் மாநி லப் பொருளாளர் எஸ். தேவரா ஜன் வாழ்த்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட னர். முடிவில், மாவட்டப் பொரு ளாளர் பி.நடராஜன் நன்றி கூறினார். உதகை உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் கரு ணாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நாகராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசி னார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் சங்கரலிங்கம், உதகை வட்ட ரத் தலைவர் அசுரா, குன்னூர் வட்டாரத் தலைவர் ராமன்குட்டி, மாவட்ட துணைத் தலைவர் குமார் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள். முடிவில், பெரி யய்யா நன்றி கூறினார். ஈரோடு ஈரோடு வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சங்க ரன் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி மாவட்டச் செய லாளர் வ.பன்னீர்செல்வம் உரை யாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மேனாள் மாநிலத் தலை வர் க.ராஜ்குமார் சிறப்புரை ஆற்றினார். மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் ஒருங் கிணைப்புக் குழுவின் மாவட்டத் தலைவர் என்.மணிபாரதி மற்றும் சகோதர சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.