கோவை, ஆக. 21- சுதந்திர போராட்ட வீரர், பொது வுடமைப்போராளி மறைந்த தோழர் ஜீவாவின் 118 ஆவது பிறந்தநாள் விழா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று கோவையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலக மான ஜீவா இல்லத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் தலைமை யேற்றார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பங்கேற்று, தோழர் ஜீவா வின் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இந்நிகழ்வில், கட்சியின் மாநில துணைச் செய லாளர் என்.பெரியசாமி, மாவட்டச் செய லாளர் சி.சிவசாமி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். முன்னதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோவை மாவட்டக் குழுவின் சார் பில் வயநாடு பேரிடர் நிவாரண நிதி ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 529 தொகை யினை மாவட்டச் செயலாளர் சி. சிவசாமி, மாவட்டப் பொருளாளர் சி. தங்கவேல் ஆகியோர் மாநிலச் செயலா ளர் இரா. முத்தரசனிடம் வழங்கினர்.