அவிநாசி டிச.28- அவிநாசி அருகே தண் டுக்காரன்பாளையம் பகுதி யைச் சேர்ந்த 17 நபர்களுக்கு தீண்டாமை ஒழிப்பு முன் னணி முயற்சியால் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவிநாசி ஒன்றியம் தண் டுக்காரபாளையம் அருகே குமாரபாளையம் ஆதிதிரா விடர் காலனி பகுதியில் 20 ஆண்டுகளாக குடி யிருந்து வரும் பட்டியலின வகுப்பை சேர்ந்த 57 நபர்கள் வீட்டு மனை பட்டா கோரி விண் ணப்பம் செய்திருந்தனர். இதில், 40 நபர்க ளுக்கு இணைய வழிபட்டா கடந்த ஜன.18 ஆம் தேதி வழங்கப்பட்டது. மீதமுள்ள 17 நபர் களுக்கும் பலமுறை மாவட்ட ஆட்சியர், வட் டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் பட்டா வழங்கப்படவில்லை. இதனால், பட்டா கிடைக்காதவர்கள் அடிப்படை வசதி கள் பெற முடியாமல் சிரமத் திற்குள்ளானர். இதைத்தொ டர்ந்து, அக்டோபர் 19 ஆம் தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டச் செயலா ளர் கனகராஜ் தலைமையில் பட்டா கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக் கும் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். அப்போது, வட்ட்டாட்சியர் மோகனன் மற் றும் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் ஆகியோர் பட்டா வழங்குவதாக உறுதிய ளித்தனர். அதன்படி அக்டோபர் மாதத்தில் 15 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. மீத முள்ள 2 நபர்களுக்கு வியாழனன்று பட்டா வழங்கப்பட்டது. பட்டா பெற்றவர்கள் தீண் டாமை ஒழிப்பு முன்னணிக்கு நன்றி தெரிவித் துள்ளனர்.