districts

img

தனியார் நிகழ்ச்சிக்காக நகர்மன்ற அலுவலக வளாகத்தில் பாதையா?

உடுமலை, டிச.3- உடுமலையில் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை தனியார் அமைப்பு கள் சார்பில் தளி சாலையில் உள்ள  தேஜஸ் மஹாலில் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந் நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்களை நிறுத்த ஏதுவாக, உடுமலை நகர் மன்ற அலுவலக வளாகத்தில் பாதை அமைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நூறு ஆண்டு பழமையான உடு மலை நகராட்சி அலுவலக வளாகத் தின் பழைய கட்டிடத்தில் மாவட்ட இசைப் பள்ளி செயல்பட்டு வருகி றது. மேலும் உடுமலை ஊராட்சி ஒன் றிய அலுவலகத்திற்கு புதிய கட்டி டம் கட்டும் பணி நடைபெறுவதால், நகராட்சியின் பழைய கட்டிடத்தின் மேல் பகுதியில் ஊராட்சி ஒன்றிய  அலுவலகமும் செயல்பட்டு வருகி றது. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், இசை பள்ளிக்கு  மாணவர்களும் வந்து செல்கின்ற னர். இந்த நகரமன்ற அலுவலகத்தை சுற்றி பாதுகாப்பு சுவர் கட்டப்பட் டுள்ளது. இந்நிலையில், நகரமன்ற  அலுவலகத்தின் அருகில் உடுமலை  தமிழிசை சங்கம் மற்றும் கட்டுநர் வல் லுநர் சங்கத்தினர் நடத்தும் கண் காட்சி, திரை பிரபலங்கள் கலந்து கொள்ளும் மூன்று நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, நகர்மன்ற அலுவலக வளாகத்தில் சிறப்பு பாதைகளை அமைக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தனியார் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிக்கு அரசின் வளா கத்தை பயன்படுத்த அனுமதிப்பது தவறான முன் உதாரணத்தை ஏற்ப டுத்தும். பழமையான உடுமலை நக ராட்சியின் வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் எத்தலப்பர் சிலை, மாவட்ட இசை பள்ளி, உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற் றும் உடுமலை நகராட்சி நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.  இதை மறந்து கண்காட்சிக்கு செல்ல  சிறப்பு பாதை அமைத்துள்ளார்களா என தெரியவில்லை. அரசு விதிகளை மீறி சுற்றுச்சுவர் மீது பாதை அமைத் தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற னர்.