பென்னாகரம், ஜன.22- பாப்பாரப்பட்டி பயணியர் நிழல் கூடத்தில் கட்சி பதவியோடு பொறிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் கல்வெட்டை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சிருக்கு புகார் அனுப்பியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தில் பயணியர் நிழற்கூடம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணியின், நிதியில் கட்டப்பட்டுள்ளது. பணி முடிந்தபிறகு நிதி ஒதுக்கீட்டிற்கான கல்வெட்டு நிழற்கூடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில், ஜி.கே.மணி-யின் கட்சி மற்றும் அவர் வகிக்கும் பொறுப்பு ஆகியவை அதில் பொறிக்கப்பட்டுள்ளது. இது விதிக்கு மீறிய செயலாக உள்ளது. எனவே, கல்வெட்டை நீக்கிவிட்டு அரசு நெறிமுறைப்படி கல்வெட்டு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், பாப்பாரப்பட்டி பேரூராட்சி கவுன்சிலருமான வே.விஸ்வநாதன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் மனு அளித்துள்ளார்.