காளப்பட்டி நேருநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், பயின்று வரும் மாணவர்களின் பெற் றோர்கள், பள்ளிக்கு கல்வி சீர் வழங்கினர். முன்னதாக கொட்டு மேளம், நாதஸ்வர இசையுடன், தங் கள் தெருவில் இருந்து ஊர்வலமாக பள்ளிக்கூடத்திற்கு வந்து வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் ஆகியோரிடத்தில் வழங்கினர். இதில், பள்ளிக்கு தேவையான நாற்காலி, எழுது பலகை, எழுதுகோல் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றிருந்தன.