districts

புதிய வகுப்பறைகள் கட்ட வலியுறுத்தி பெற்றோர்கள் போராட்டம்

உதகை, ஆக.4- உதகை அருகே புதிய வகுப்பறை கள் கட்ட வலியுறுத்தி பெற்றோர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். உதகை தாலுகா, கோக்கால் பகு தியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற் றும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றன. இங்கு 200க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பழங்குடியின மாணவர்களும் படித்து வருகின்ற னர். இந்நிலையில், பள்ளிக்கூடத் தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவ தற்காக முடிவு செய்யப்பட்டது. அதன் படி சில வகுப்பறை கட்டடங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் அங்கு,  இதுவரை புதிய வகுப்பறைகள் கட் டவில்லை. இதனால் மாணவர்க ளுக்கு போதிய இடவசதியின்றி, திறந்த வெளியில் அமர்ந்து படிக்க  வேண்டிய நிலை உள்ளது. மேலும் காற்று, மழை உள்ளிட்ட காரணங்க ளால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் புதிய கட்ட டங்கள் கட்டுவதற்கான பணியை தொடங்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பல்வேறு தரப்பினரும் வலியு றுத்தி வந்தனர். ஆனால், எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், பள்ளிக்கு மாண வர்கள் வழக்கம்போல் வந்தனர். அவர்களுடன் பெற்றோர்களும் வந் திருந்தனர். இதன்பின் பள்ளி வளா கத்தில் புதிய வகுப்பறை கட்டடங் கள் கட்டுவதற்கான நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி பெற்றோர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்த உதகை வட்டாட்சியர் சரவணன் மற் றும் காவல் துறையினர், விரைந்து  வந்து பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து புதிய வகுப்பறைகள் கட்ட நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளித்தனர். இதைத்தொடர்ந்து பெற் றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.