திருப்பூர், ஏப். 28 - திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தில் தமிழ்நாடு அரசு அறிவித்த ‘”நம்ம ஊரு சூப்பர்” நிகழ்வை சிறப்பாக நடத்துவது குறித்து திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சி தலைவர்கள் பங் கேற்ற கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி தலைமையில் வெள்ளியன்று நடை பெற்றது. கிராமப் பகுதிகளில் அரசு நலத்திட்டங் களை பார்வையிட வட்டார வளர்ச்சி அலுவ லர் வருகின்ற தகவலை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தெரி யப்படுத்த வேண்டும் என்று மங்களம் ஊராட்சி தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி கோரிக்கை வைத்தார். தனது ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பி னர் நிதியில் போடப்பட்ட சாலையை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வையிட வந்தபொ ழுது அந்த பகுதி பொது மக்களிடம் குறிப்பிட்ட அளவு தூரம் தான் சாலை போடுவோம் என சொல்லிச் சென்றிருக்கிறார். இதனால் பொது மக்கள், தன்னிடம் வந்து கேள்வி கேட்டு தக ராறு செய்வதாகவும், ஊராட்சி மன்ற தலை வரையும் பார்வையிட செல்லும்போது தக வல் கொடுத்து சென்று இருந்தால் இந்த பிரச் சனை வர வாய்ப்பில்லை எனவும், இது மாதிரி பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி நிர்வாகத்திற்கு தனது வருகை பற்றி தகவல் சொன்னால் தலைவரும் உடன் சென்று பிரச்சனைகளை அங்கேயே தீர்த்து விடலாம் என்று அவர் கூறினார். முதலிபாளையம் ஊராட்சிமன்ற தலை வர், தனது ஊராட்சியில் நடைபெற உள்ள விழா சம்பந்தமாக பேசுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்ட பொழுது அவர் பேச மறுத்துவிட்டார் என கூறினார். இதற்கு பதில் கூறிய வட்டார வளர்ச்சி அலுவலர், உங்களிடம் அனுமதி கேட்டு நான் வர வேண்டிய அவசியம் இல்லை என சொல் லிவிட்டு அனைவரையும் அவமதிக்கும் வித மாக கூட்ட அரங்கில் இருந்து வெளியேறி னார். கூட்டம் அரங்கிற்கு வரச் சொல்லி அழைத்தபோது வர மறுத்து விட்டார்.
வட்டார வளர்ச்சி அலுவலரின் நடவடிக் கையை கண்டித்து கூட்டத்தில் பங்கேற்ற மங் களம், இடுவாய், பட்டம்பாளையம், முதலிபா ளையம் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலை வர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இங்கு நடைபெற்ற சம்பவங்களை மனு வாக மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், திட்ட இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக் குநர் ஆகியோரிடம் மனுவை தந்து உரிய நட வடிக்கை எடுக்க வலியுறுத்தினர். ஊராட்சித்தலைவர்களை அவமதித்தும், அலட்சியமாகவும் நடந்து கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி னர். திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிமன்ற தலைவர்களையும், 13 ஊராட்சி மக்களையும் மதிக்காமல் செயல்ப டும் வட்டார வளர்ச்சி அலுவலரை உடனடி யாக இடமாற்றம் செய்ய வேண்டும் என ஏற்க னவே மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி இருப்பதாகவும், மீண்டும் மாவட்ட ஆட்சியரி டம் வலியுறுத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதில் ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்ட மைப்பின் தலைவரும், இடுவாய் ஊராட்சி மன்ற தலைவருமான கே.கணேசன், மங்க ளம் ஊராட்சி மன்ற தலைவர் மந்திராச்சல மூர்த்தி, முதலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மயூரி பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.