districts

img

கழிவுநீர் தேக்கம்: ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

அவிநாசி, டிச.14- அவிநாசி அருகே  நேரு நகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்குவதாக கூறி, அப் பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை   முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக் கள் கூறியதாவது, செம்பியநல்லூர் ஊராட் சிக்கு உட்பட்ட நேருநகர் பகுதியில் 250 க்கும்  மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இப்பகுதி யில் போதுமான சாக்கடை வசதியில்லாத தால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர்  குடியிருப்பு அருகே குட்டை போல் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் கொசு  அதிக அளவு உற்பத்தியாகி, சுகாதாரக் கேடு  ஏற்பட்டு, நோய் தோற்று உருவாகி வருகிறது.  நேரு நகர் உருவாகி 40 ஆண்டுகளுக்கு மேலா கியும், சாக்கடை வசதி, சாலை வசதி, குடிநீர்  வசதிகளுக்காக தொடர்ந்து போராடி வரு கிறோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சி மன்ற செயலாளர், தலைவர் உள்ளிட்டோரைப் பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீ ஸார், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய குமார் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த் தையில், இரு மாதங்களுக்குள் உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.