districts

img

சுகாதார திருவிழா: பி.ஆர்.நடராஜன் எம்.பி., துவக்கி வைத்தார்

கோவை, ஏப்.22- நாடாளுமன்ற உறுப்பினர் நிதி யில் சுகாதார திருவிழா கோவை  மாவட்டத்தில் எஸ்.எஸ்.குளம் மற் றும் நரசிம்மநாயக்கன்பாளையத் தில் வெள்ளியன்று நடைபெற் றது. இதனை மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  சார்பில் கலைஞரின் வருமுன் காப் போம் சிறப்பு மருத்துவ முகாம்  மற்றும் சுகாதார திருவிழா எஸ்.எஸ். குளம் வையம்பாளையத்தில் உள்ள சுதந்திர மேனிலைப்பள்ளி யிலும், நரசிம்மநாயக்கன்பாளை யம் எக்செல் மெட்ரிக் பள்ளியிலும்  நடைபெற்றது. நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் நடை பெறும் இம்மருத்துவ முகாமை பி.ஆர்.நடராஜன் எம்.பி., துவக்கி  வைத்து சிறப்புரையாற்றினார். எஸ்.எஸ்.குளம் வையம்பாளை யத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை சுகாதாரப் பணிகள் அலுவலக உதவி திட்ட மேலாளர் ராமநா தன், வட்டார மருத்துவ அலுவலர் பிரபா மற்றும் மருத்துவ அலுவ லர்கள், சுகாதாரத்துறை அலுவ லர்கள், செவிலியர்கள் இம்முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில், ஏராளமான மக்கள் பங் கேற்று பயனடைந்தனர். இம்முகாமில் பல்வேறு பிரிவு களின் முதன்மை மருத்துவர்கள்  பங்கேற்று இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட் டன. மேலும், முதலமைச்சர் விரி வான காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காப்பீட்டு அட் டைகள் வழங்கப்பட்டன. சித்த மருத்துவப்பிரிவு சார்பில் யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் திமுக மேற்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பையா (எ) கிருஷ்ணன், கீரணத்தம் ஊராட் சித் தலைவர் ராசு, துணைத் தலை வர் கோபால், எஸ்.எஸ்.குளம் திமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ் குமார், மருத்துவம் சாரா மேற் பார்வையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, சுதந் திர பள்ளி தலைமை ஆசிரியர் சுகன்யா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று நரசிம்மநாயக் கன்பாளையம் எக்செல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில், வட்டார மருத் துவ அலுவலர்கள், துணை இயக் குநர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.