தாராபுரம், அக். 20 – தாராபுரத்தில் பூக்கடை கார்னரில் கூட்ட நெரிசலை கண்கா ணிக்க போலீசார் பரண் அமைத்து போக்குவரத்தை கட்டுப்ப டுத்தி வருகின்றனர். தாராபுரம் பூக்கடை கார்னர் கடைவீதியின் மைய பகுதி யாக உள்ளது. இப்பகுதியில் ஜவுளி கடைகள், மளிகை கடை கள், பாத்திரக் கடைகள் மற்றும் நகைகடைகள் உள்ளன. தீபா வளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க மக் கள் கூட்டம் பூக்கடை கார்னர் பகுதிக்கு டூவீலரிலும், நடந்தும் குடும்பத்தோடு வருகின்றனர். மேலும் ஜவுளி எடுத்துக் கொண்டு இதர மளிகை, வீட்டு அலங்காரப் பொருட்களை யும் வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக ஜவுளி கடை வீதி, பெரிய கடை வீதியில் தீபாவளி கூட்ட நெரிசல் அதிகரித் துள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைகள் மற்றும் பொருட்களை திருடப்படாமல் இருக்க பூக்கடை கார்னர் பகுதியில் பரண் அமைத்து போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் பூக்கடை கார்னர் பகுதியில் நான்கு பகுதியிலும் ஒலிபெ ருக்கி வைத்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் போக்குவரத்தை கண்காணிக்கும் காவலர்கள் அறிவிப்பு களை செய்து வருகின்றனர். போக்குவரத்து காவலர்களுடன் சட்டம் ஒழுங்கு காவலர்கள் மற்றும் மகளிர் காவலர்கள் கூட்ட நெரிசலில் பொதுமக்கள் உடமைகளை யாரும் திருடிச் செல் லாதவாறு சாதாரண உடையில் கண்காணிப்பை தீவிரப்ப டுத்தி வருகின்றனர்.