districts

கல்வி கடன் ரூ.4.80 லட்சம் தள்ளுபடி செய்ய உத்தரவு

நாமக்கல், நவ.15- வங்கியின் சேவை குறைபாடு காரணமாக, கல்விக் கடன் பெற்ற வரின் மீதமுள்ள கடன் ரூபாய்  4,80,559/- ஐ தள்ளுபடி செய்ய வங் கிக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம், சூரமங்கலம் இளையப்ப நகரில் வசித்து வருபவர் இளங்கோ  மகன் முருகபிரகாஷ் (36). இவர்  அமெரிக்காவில் விமான பயிற்சி  படிப்பை படிப்பதற்காக நாமக்கல் ்லில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி (ஐஓபி) ஒன்றில் கடந்த 2007 ஆம் ஆண்டு ரூபாய் 15 லட்சம் கட னாக பெற்றுள்ளார். இதற்கு அவ ரது தாத்தா பெயரில் உள்ள வீட்டை  அடமானமாக கொடுத்து, இளங்கோ வின் தந்தை ஜாமின் கையொப்பம் இட்டுள்ளார். படிப்பை முடித்து ஓராண்டு காலத் திற்குப் பிறகு அல்லது வேலை கிடைத்த ஆறு மாத காலத்திற்கு பிறகு 120 மாதங்களுக்கு, மாதம் ரூபாய் 20 ஆயிரம் வீதம் கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற  ஒப்பந்தப்படி இதுவரை ரூபாய்  36,50,000/-  வங்கிக்கு செலுத்தி யுள்ளதாகவும், கூடுதலாக வட்டியை கணக்கிட்டு இன்னும் ரூபாய்  4,80,559/-  செலுத்த வேண்டும் என்று  வங்கி கேட்கிறது.  வங்கி நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் கடன் வாங்கும் போது  இன்சூரன்ஸ் பாலிசிக்காக ரூபாய் 13,005/-  செலுத்தினேன். ஆனால், இன்சூரன்ஸ் பாலிசியை வங்கி வழங்கவில்லை. வங்கியின் இத்த கைய செயல்கள் நேர்மையற்ற வர்த்தக நடைமுறை எனக்கூறி, கூடு தலாக வசூலிக்கப்பட்ட தொகை ரூபாய்  5,72,272/-  மற்றும் இழப்பீ டாக ரூபாய் 5,00,000/- வழங்க கோரி,  வங்கி மீது கடந்த 2019 ஆம் ஆண்டு  முருகப்பிரகாஷ் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடுத்திருந்தார்.   இதைத்தொடர்ந்து இருதரப்பு வாதங்களை கேட்ட மாவட்ட நுகர் வோர் நீதிமன்ற நீதிபதிகள் வீ.ராம ராஜ் மற்றும் உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர் செவ்வாயன்று இறுதி தீர்ப்பளித்தனர். அதில் வங்கி  வட்டி வசூலித்ததில் எவ்வித விதிமு றைகளையும் மீறவில்லை. ஆனால்,  பத்தாண்டு கால இன்சுரன்ஸ்காக பணம் பெற்றுக் கொண்டு விட்டு  இரண்டு ஆண்டுகளில் வங்கி அதனை வாபஸ் பெற்றுக் கொண் டுள்ளது. இன்சூரன்ஸ்க்காக பணம் செலுத்தியவருக்கு  அறிவிப்பு  தரா மல், இன்சூரன்ஸ்யை வாபஸ் பெற்றுக் கொண்டதும், இன்சூரன்ஸ்  செய்ததற்கான எந்த ஆவணத்தை யும் வழங்காததும் வங்கியின் சேவை  குறைபாடு எனக்  கூறினர். மேலும்,  வங்கியின் சேவை குறைபாட் டிற்காக கடன் பெற்றவர் செலுத்த வேண்டியதாக கூறப்படும் ரூபாய் 4,80,559/-  வங்கி தள்ளுபடி செய்து, வழக்கு தாக்கல் செய்தவர் தரப்பில் அடமானம் வைத்த சொத்துக்களின் அசல் ஆவணங்களை நான்கு வாரங்களுக்குள் திரும்ப வழங்க வேண்டும் என வங்கிக்கு உத்தர விட்டனர்.