பொள்ளாச்சி, அக். 4- ஒன்றிய அரசின், குலத்தொழிலை வலியு றுத்தும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முற்போக்கு அமைப்புகள் சார்பில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகில் பிரச்சார இயக்கம் புத னன்று நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு, விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம், குலத் தொழிலை செய்ய வேண்டுமென வலியுறுத் தப்படுகிறது. எனவே, ஒன்றிய அரசு, இத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென பிரச்சார இயக்கம் பொள்ளாச்சி பேருந்து நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பழ. அசோக் குமார் தலைமை ஏற்றார். இரா.மனோகரன் வரவேற்றார். பா.பாலமுருகன், பா.ராஜேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செய லாளர் கு.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற் றினர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுக்கா குழு உறுப்பினர் மகா லிங்கம், திமுக வழக்கறிஞர் அணி இதய வர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெ. சண்முகம், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கலங்கல் வேலு, ஆதித் தமிழர் பேரவையின் தி.செ.கோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ச.பிரபு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.