கோவை, நவ.19- சூலூர் அருகே விவசாய நிலத்தில் எண் ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், இருகூரிலிருந்து கர் நாடக மாநிலம் தேவனஹள்ளி (பெங்களூரு) வரை சுமார் 360 கிலோமீட்டர் தொலைவிற்கு எண்ணெய் குழாய் பதிக்கும் பணிகளை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொண்டு வரு கிறது. இதில் கோவையிலிருந்து முத்தூர் வரை 70 கிலோமீட்டர் தொலைவிற்கு விவசா யிகள் நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் கள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத் திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து விவ சாயிகள் பல்வேறு கட்டங்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற னர். இதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று சூலூர் அடுத்த காடாம்பாடி கிராமத்தில் எண் ணெய் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெ றும் விவசாய நிலத்தில் திரண்ட 50க்கும் மேற் பட்ட விவசாயிகள் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக கருப்பு கொடி ஏந்தி வந்தார் விவசாயிகளை போலீசார் தடுக்க முயன்றனர். தங்களது சொந்த நிலத்தில் கருப் புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவதாக வும், போலீசார் அறவழிப் போராட்டத்தை தடுக்கக்கூடாது எனவும் முழக்கங்களை எழுப்பினர். விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை மறுசீராய்வுக்கு உட்படுத்தி சாலையோரம் அமைத்திட வேண்டும். இதற்கு தமிழக முதல்வர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணி கள் தொடர்ந்தால் அனைத்து விவசாய சங் கங்களையும் ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக விவசாயிகள் எச்சரித்தனர்.