கோவை, மார்ச் 2- தருபுர ஆதினத்தை மிரட்டிய பாஜகவை கண்டித்து கோவை கரும்மத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் சைவ வழிபாட்டு நெறிக் கழகத்தினர் பரவலான சுவரொட்டிகள் ஓட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி னர். தருமபுர ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டி யதாக பாஜக மாவட்டத் தலைவர் உட்பட பலர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். அரசியல் வெளிச்சத் திற்கும், அணிதிரட்டலுக்கும் கார்ப்ரேட் சாமி யார்கள் உள்ளிட்டு உள்ளூர் சாமியார்கள் வரை பயன்படுத்துவது பாஜகவின் உத்திக ளில் ஒன்று. இந்நிலையில் தருமபுர ஆதினத் தின் பாலியல் வீடியோ இருப்பதாக ரூ.40 கோடி கேட்டு பாஜக மாவட்டத் தலைவர் மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதன்தொடர்ச்சியாக ஆங்காங்கே பாஜகவிற்கு எதிராக போராட் டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் சின்னியம்பாளையம் உட்பட புறநகர் பகுதியில் சைவநெறிக் கழ கத்தினர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். அதில் “ஆபாச வீடியோ தயாரித்து மரியா தைக்குரிய தருமபுரம் ஆதீனம் அவர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த பாஜகவை சார்ந்தவர்களை கண்டிக்கிறோம்” என்ற வாச கங்கள் இடம் பெற்றுள்ளது. பாஜகவைக் கண்டித்து சைவ வழிபாட்டு நெறிக் கழகத்தினர் புறநகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டி கள் ஒட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.