districts

img

திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பகுதி நேர ரேசன் கடை திறப்பு

திருப்பூர், ஜூலை 3 - திருப்பூர் மாநகராட்சி 5ஆவது வார்டு திருக்குமரன் நகர்  அடுக்குமாடி குடியிருப்பில் 259 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பகுதி நேர நியாய விலைக் கடையை திருப்பூர்  தெற்கு எம்எல்ஏ கே.செல்வராஜ் புதன்கிழமை திறந்து  வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார்,  மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.