districts

img

முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்டில் கட்டுமான சங்க பெயர் பலகை திறப்பு

திருப்பூர், செப்.11- முதலிபாளையத்தில் கட்டுமான தொழிலாளர் சங்க புதிய கிளை பெயர்ப்பலகை திறக்கப்பட்டது முதலிபாளையம் ஊராட்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் கட் டிட கட்டுமான தொழிலாளர்களின் புதிய கிளை திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கிளைத் தலை வர் பெருமாள் தலைமை தாங்கினார். கட்டிட சங்கக் கொடியை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஏற்றி வைத்தார். சங்கப் பெயர் பலகையை தமிழ்நாடு கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனப் பொதுச் செயலாளர் டி.குமார் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவுத்தொகை ரூ.5 ஆயிரம்  மாநில பொதுச்செயலாளர் டி.குமாரிடம் ஒப்படைக்கப் பட்டது. சிபிஎம் மாநிலக்குழு கட்டிட கட்டுமான நிதியாக கட்சி யின் சிட்கோ கிளை ரூ.3 ஆயிரம், பொன்னாபுரம் கிளை  ரூ.2 ஆயிரத்து 500, சிட்கோ மாதர் கிளை ரூ.ஆயிரத்து 600, ஹவுசிங் யூனிட் கிளை ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.9  ஆயிரத்து 100 மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் கிளைச் செயலாளர்கள் ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப் பினர்கள் சி.சுப்பிரமணியம், ஜானகி உட்பட கட்சி அணியினர், ஹவுசிங் யூனிட் பகுதி கட்டுமானத் தொழிலாளர்கள், பொது மக்கள் மற்றும் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர்.

;