districts

img

சட்டத்தின் ஓட்டையில் நுழைகிறாரா ஆளுநர் ?

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும். நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்கிற மசோ தாக்களை தமிழ்நாடு அரசு சட்டமன்ற உறுப் பினர்களின் ஏகமனதான ஆதரவோடு நிறை வேற்றி அனுப்பியும், ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டும், திருப்பி அனுப்பியும், விலை மதிப்பற்ற உயிர் மாய்வது குறித்த கவலையற்று கிடக்கிறார்.  நீட் தேர்வு தற்கொலைகள், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை தொலைத்தவர்களின் தற்கொலை பட்டியல் நீளுகிறது. குறிப்பாக ஆன்லைன் ரம்மி  விளையாட்டை தடை செய்ய வேண்டும் என் கிற மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்ட பிறகு, 47 பேர் தற்கொலை செய்து கொண் டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தது மட்டுமே. வெளி உலகிற்கே தெரிய வராதது இன்னும் எத்தனையோ. இப்போது ஆன்லைன் ரம்மி விளை யாட்டை தடை செய்யக்கோரும் மசோ தாவை இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பியிருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. இதற்கிடையில், ஆன்லைன் ரம்மி விளை யாட்டை தடை செய்ய வேண்டும் என்பதற் கான காரணங்கள் குறித்து பேசுவதற்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ஆளு நர் ஆர்.என்.ரவியிடம் தேதி கேட்டு, அது இழுத்தடிக்கப்பட்டது ஊரே  அறியும். ஆனால், எந்த காத்தி ருப்பும் இல்லாமல் ஆன் லைன் ரம்மியை நடத்தும் உரி மையாளர்கள் ஆளுநர் மாளிகை யில் தேநீர் விருந்தோடு கதா காலட்சேபம் நடத்தியது ஊரே நாறி யது. ஏன் ஆளுநருக்கு இந்த பிடிவாதம், ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத் தித்தான் ஆக வேண்டும் என்பதில் ஆளு நருக்கு என்ன வரவு. இத்தனை தற்கொலை கள் நடந்த பிறகும் ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பும் சூழ்ச்சி என்ன, “நரியின் கனவில் எலும்பு மலை” என்கிற சொல வடை இங்கு பொருந்துமா. சட்டத்தின் ஓட் டைகளில் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆளுநர் நுழையலாமா என்பதே மக்கள் முன் வைக்கும் கேள்வி. 

இருக்கிறது...

”அன்புள்ள அப்பா, அம்மா மற்றும் அம்மு, என் குழந்தைகள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள், உங்கள் அனைவரையும் நான் ஏமாற்றிவிட்டேன். எனக்கு வாழ தகுதியில்லை. எனவே நான் சாகபோகிறேன். ஆண்டவன் எனக்கு அழ கான குடும்பத்தை கொடுத்தான், ஆனால் நான் அதனை பயன்படுத்தவில்லை. நான் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து விட்டேன், அதிலிருந்து என்னால் மீள  முடியவில்லை. அம்மு உன் கிட்ட மன்னிப்பு கேட்க எனக்கு  தகுதியில்லை. எனக்காக நீ அனைத் தையும் இழந்து இருக்கிறாய். அடுத்த பிறவியில் உன்னை பார்த்து கொள் வேன், என்னை மன்னித்துவிடு. அக்கா  மற்றும் சந்தோஷ் நீங்கள் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளீர்கள், நீங்களும் என்னை மன்னித்துவிடுங்கள். என் பிள்ளை களையும் அப்பா அம்மாவையும் பார்த்து  கொள்ளுங்கள். உங்கள் அனைவரிடம் இருந் தும் பிரியா விடைபெறுகிறேன். மதிப்பு மிக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்க ளுக்கு, தயவு செய்து இந்த ஆன்லைன் ரம் மியை தடை செய்யுங்கள். உங்கள் காலில் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன். என்னை போல் பல பேர் குடும்பத்தை அனாதையாக விட்டு செல்கிறார்கள். இனி யாருக்கும் இந்த  நிலைமை வர கூடாது, தயவு செய்து தடை செய்யுங்கள்” என பதிவு செய்துள்ளார். இக்கடிதத்தின் வரிகளுக்கு இரங்காத மன மும் இரங்கும்... அப்படி இரங்கவில்லை என்றால் அது மனிதமே இல்லை..

தற்கொலை செய்து கொள்வதும், தற் கொலைக்கு தூண்டுவதும் பெரும் குற்றம்  என இந்திய தண்டனைச்சட்டம் வரையறுத் துள்ளது. வாழும் உரிமையை மட்டும் அரசு உனக்கு வழங்கியிருக்கிறது. உயிரை மாய்த் துக்கொள்ளும் உரிமை உமக்கு வழங்கப்பட வில்லை என்பதே அதன் சாரமாகும்.   ஒருவர் தற்கொலை செய்து கொள்வ தற்கு முயற்சி செய்து, அதற்கென ஏதாவது ஒரு செயலை புரிந்திருந்தால், அந்த குற்றத் திற்காக ஓர் ஆண்டுக்கு உட்பட்ட வெறுங் காவல் அல்லது அபராதம் அல்லது இரண் டும் தண்டனையாக விதிக்கப்படும் என (ஐபிசி 309) ஆவது பிரிவு சொல்கிறது. அதே நேரத்தில், யாராவது தற்கொலை செய்து கொண்டால் அப்படித் தற்கொலை செய்து கொல்வதற்கு உடந்தையாக இருந்தவ ருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைக்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என (ஐபிசி 306) ஆவது பிரிவு சொல்கிறது. என்ன செய்யலாம்.