சவுத் இந்தியா விஸ்கோர்ஸ் (சிஐடியு) தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மேட்டுப்பாளையம் முன்னாள் தாலுகா குழு உறுப்பினரும் மறைந்த தோழர் பி.சண்முகம் அவர்களின் படத் திறப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், கே.எஸ்.கனகராஜ் உட்பட அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.