பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு
பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு மேட்டுப்பாளையம், டிச.15- மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்து மோதிய தில் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் உயிரிழந்தார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியரான இவர், ஞாயி றன்று மதியம் காரமடை - தோலம்பாளையம் சாலை யில் குருந்தமலை பிரிவு என்ற இடத்தில் தனது இரு சக்கர வாகனத்தில் சுப்பிரமணியம் வந்து கொண்டிருந் தார். அப்போது, வெள்ளியங்காடு பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்து, அவரை முந்தி செல்ல முயன்றபோது, அவர் மீது பேருந்து உரசியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுப்பி ரமணியம், ஓடி கொண்டிருந்த பேருந்தின் அடியில் சிக்கி கொண்டார். இதனால் பேருந்தின் பின்புற சக்கரங்கள் அவர் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இவ்விபத்து குறித்து தகவலறிந்த காரமடை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப் பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தனியார் வேலைவாய்ப்பு முகாம் சேலம், டிச.15- சேலம் மாவட்ட இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் டிச.20 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் ரா.பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில், டிச.20 ஆம் தேதியன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணி யிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ள னர். கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற விருக்கும் இம்முகாமில் அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன் பெறலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர் களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவுசெய்ய வேண்டும். மேலும், விவரங்க ளுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின் னஞ்சல் வாயிலாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என தெரி விக்கப்பட்டுள்ளது.
கூட்டாட்சி தத்துவத்தின் ஆணிவேரை அறுக்க முயற்சி
பொள்ளாச்சி, டிச.15- கூட்டாட்சி தத்துவத்தின் ஆணி வேரை அறுக்கும் முயற்சியாகவே, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதென, மோடி அரசை சாடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடி யுள்ளார். மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் நாச்சிமுத்துவின் மகன் திருமண விழா, கோவை மாவட் டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டி தனியார் திரு மண மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., கலந்து கொண்டார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசு கையில், சுதந்திர இந்தியாவில் மீண்டும் இருள் சேர்ந்து நெருக் கடி நிறைந்த சூழல் உருவாக்கி யுள்ளது. இந்நாட்டின் அரசியல் சட்டத்தை வகுத்து தந்தவர் அண் ணல் அம்பேத்கர். ஆனால், அந்த அரசியல் சட்டத்தை சிதைத்து இந் துத்துவாவின் மனு தர்மத்தை சட்ட மாக மாற்ற வேண்டும் என்ற உள் நோக்கம் பிரதமர் மோடிக்கு இருக் கிறது. அதன் விளைவாகத்தான் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட் டத்தை அறிவித்துள்ளார். ஒரு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு இரண்டு ஆண்டுகளிலே கவிழ்ந்து போனால், அப்போது மீண்டும் எல்லா மாநிலங்களுக்கும் சேர்ந்து தேர்தல் நடத்துவாரா? மேலும், ஒரு சில மாநிலங்களில் அரசு கவிழ்ந்தால் அனைத்து மாநிலங்களுக்கும், நாடாளுமன் றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத் துவாரா? என கேள்வி எழுகிறது. கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணி வேரை அறுக்கவும், இந்தியாவின் ஒருமைபாட்டிற்கு எவையெல்லாம் தீங்கு விளைவிக்குமோ அந்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். தேசிய இனங்களை எல்லாம் ஒன்று சேர்த்து, இந்தியா என்ற ஒரு நாடாக உள்ளது. இதில் ஒரு மொழி, ஒரு மதம் கலாச்சாரம், ஒரே தேர்தல் என்று சொல்வது, இந்தியா துண்டு துண்டாகும். இந்திய அரசியல் சாச னத்தை மாற்ற நினைத்தால் இந் தியா சிதறுண்டு போடும். கேரளம் மாநிலம், வைக்கத்தில் பெரியா ருக்கு மணி மண்டம் கட்டி, அதை முதல்வர் திறந்து வைத்து கேரளம் முதல்வருடன் நல்லுறவை ஏற்ப டுத்தியுள்ளார். இந்த சூழலில் தமிழ் நாட்டில் கூட்டணிகளை பற்றி விவா தங்கள் வருகின்றன. இந்தியா கூட்ட ணியில் திமுக உள்ளது. தமிழ்நாட் டில் திமுக தலைமையில் கூட்டணி வலுவாக உள்ளது. மக்கள் திமுக கூட்டணி பக்கம் உள்ளனர். தமிழ் நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிற்காக ஒன்றிய அரசிடம் நிவாரணம் கேட்கப்பட்டது. ஆனால், கேட்டதில் நான்கில் ஒரு பங்கு கூட தரவில்லை. இந்த ஓர வஞ்சனை, பாகுபாடு ஒன்றிய அரசி டம் உள்ளதை மக்களிடம் தெளிவு படுத்த வேண்டும். சோதனையான காலக்கட்டத்தில் தமிழக அரசிற்கு கூட்டணி கட்சிகளும், மக்களும் துணையாக உள்ளனர், என்றார்.
ஐஐடி மாணவர்களின் சாதனையை முறியடித்த கோவை மாணவர்கள்
கோவை, டிச.15- சூலூர் கே.பி.ஆர் கல்லூரியில் ஆசிய புக் ஆப் ரெகார்டில் சாதனை முயற்சியாக 70 கிளீனிங் ரோபோக்கள் குறிப்பிட்ட பகுதியை ஒருங்கிணைந்து சுத்தப்படுத்தி ஐஐடி மாண வர்களின் சாதனையை முறியடித்துள்ளனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக ஆசியன் புக் ஆப் ரெகார்ட் பதியும் சாதனை முயற்சி நடைபெற்றது. இதில் ஒரே சமயத்தில் 70 ரோபோக்கள் ஒருங்கிணைந்து பணியை மேற்கொள்வது குறித்து செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. 70 பேர் தங்களது செல் பேசியில் ப்ளூடூத் மூலம் ரோபோக்களுடன் இணைத்து இந்த சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். மாணவர்கள் தங்களுக்கு பெற்றோர்களால் கொடுக்கப்பட்ட கை செலவு பணத்தை கொண்டு முதலில் 3 ரோபோக்களையும், அதன் பிறகு தற்போது கே.பி.ஆர் கல்வி நிறுவன தலைவரின் உதவி யுடன் 70 ரோபோக்களையும் செய்துள்ளனர். இந்த ரோபோக்கள் ஒருங்கிணைந்து ஒரு பகுதியை சுத்தம் செய்யும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. இதனை தற்போது ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்தில் பதிவு செய்ய ஒரு சாதனை முயற்சியாக இயக்கி காட்டப்பட்டது. இதுகுறித்து மாணவர்கள் கூறும் போது, 6 மாத காலம் கடுமையாக உழைத்து இந்த ரோபோக்களை நாங்கள் உருவாக்கி உள் ளோம். மேலும் பல்வேறு கட்ட பரிசோதனை களை மேற்கொண்டு சுத்தம் செய்யும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. ரோபோக்களை செல்ஃபோன் மூலமா கவே இயங்கச் செய்யலாம். தற்போது ஆசியன் புக் ஆப் ரெக்கார்டில் இது சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஐஐடி மாணவர்கள் 40 ரோபோக்களை வைத்து சாதனை செய்துள் ளனர். தற்போது நாங்கள் 70 ரோபோக் களை இயக்கி 1150 சதுர அடி பகுதியை 25 நிமிடங்களுக்குள் சுத்தப்படுத்தி இந்த சாத னையை முறியடித்துள்ளோம், என்றனர்.
பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
உதகை, டிச.15- நீலகிரியிலுள்ள பிரபல தனியார் ஓட்டல் களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால், சுற்று லாப் பயணிகள் பதற்றமடைந்தனர். தமிழ்நாட்டிலுள்ள பள்ளி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக இ - மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக் கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம், உத கையில் பிரபல ஓட்டல்கள் மற்றும் பள்ளிக ளுக்கு ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த மாத தொடக்கத்தில் அரசு மருத்துவக்கல் லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டு, மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளி யேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. இந்நிலையில், ஞாயிறன்று மீண் டும் உதகையிலுள்ள பிரபல தனியார் ஓட்ட லுக்கான ஜெம் பார்க், மோனார்க், சின்கி ளாஸ் ஆகிய ஓட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட் டது. இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், வெடி குண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் மெட் டல் டிடெக்டர் உதவியுடன் ஓட்டல்களில் போலீசார் சோதனை செய்து வெடிகுண்டு இல்லை என்று உறுதிப்படுத்தினர். முன்ன தாக ஓட்டல்களில் மோப்பநாயுடன் போலீ சார் சோதனைக்கு சென்றதால் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்த னர்.
மின்மோட்டாரை பகலில் இயக்கிடுக விவசாயிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்
மின்மோட்டாரை பகலில் இயக்கிடுக விவசாயிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் நாமக்கல், டிச.15- நாமக்கல் மாவட்டத்தில் மின்மோட்டாரை பகலில் மட்டுமே இயக்க வேண்டும், என விவசாயிகளுக்கு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்திக்கழகத்தின் நாமக்கல் கிளை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பக லில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை விவ சாயிகள் அதிகம் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் பசுமை ஆற்றல் திட்டங்கள் ஊக்குவிக்கப்படுவ தோடு, மற்ற வளங்களை கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும்போது ஏற்படும் மாசுபாட்டின் அளவையும் குறைக்க முடியும். இந்தியாவை பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேற்றிடும் நோக்கில், பகலில் அதிகள வில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமை யாக பயன்படுத்துமாறு அனைத்து விவசாயிகளுக் கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், மின் மோட்டார்களை இயன்றவரை பகல் நேரங்களில் மட் டுமே விவசாயிகள் உபயோகிக்க வேண்டும், என தெரி விக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் கடையடைப்பு: சிபிஎம் ஆதரவு
அவிநாசி, டிச.15- வணிக பயன்பாடுகளுக்கான வாடகை கட்டிடங்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஜிஎஸ்டியை திரும்பப்பெற வேண்டும், என வலியுறுத்தி நடைபெற உள்ள வணிகர்களின் கடையடைப் பிற்கு சிபிஎம் ஆதரவு தெரிவித்துள் ளது. வணிக பயன்பாடுகளுக்கான வாடகை கட்டிடங்களுக்கு ஒன்றிய அரசு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பு கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி வணிகர் சங்க கூட்டமைப்பின் சார்பில், சொத்து வரி, வணிக பயன்பாடுகளுக்கான வாடகை கட்டிடங்களுக்கு ஒன்றிய அரசு விதித்த 18% ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி டிச.18 ஆம் தேதியன்று கடையடைப்பு நடை பெற உள்ளதென அறிவிக்கப்பட்டுள் ளது. இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியக்குழு ஆதரவு தெரிவித்துள் ளது.
பொள்ளாச்சி திருவிழா டிச.21இல் துவக்கம்
பொள்ளாச்சி திருவிழா டிச.21இல் துவக்கம் பொள்ளாச்சி, டிச.15- பொள்ளாச்சியின் பெருமைகளை பறைசாற்றும் ‘பொள்ளாச்சி திருவிழா’ டிச.21 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தொழில் வர்த் தக சபை முன்னெடுப்பில், டிச.21 முதல் 29 ஆம் தேதி வரை ஆம் தேதி ‘பொள்ளாச்சி திருவிழா’ நடைபெற உள் ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றான பொள்ளாச்சியின் பாரம்பரியத்தை அனைத்து பகுதி மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் விதமாக மண் மணம் மாற கிராமிய நிகழ்ச்சிகள், தமிழர்களின் வீரம், பண்பாடு, கலைநயம், வாழ்வியல் முறை உள்ளிட்டவற்றை உலக றியச் செய்யும் விதமாக இத்திருவிழா நடக்கவுள்ளது. பொள்ளாச்சி திருவிழாவில் நம்ம ஊர் சந்தை, புத்தகக் கண்காட்சி, ரயில்வே நிலைய புகைப்பட கண்காட்சி, இன்னிசை நிகழ்ச்சி, சமையல் போட்டிகள் மற்றும் பவா செல்லத்துரையின் கதையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது. மேலும், கிராமிய பாடல், நடனம், சமையல் போட்டிகள், சிறப்பு குழந்தைகளுக்கான பல்சுவை நிகழ்ச்சிகள், சைக்கிள் பேரணி, மாரத்தான், பழங்கால கார்களின் அணிவகுப்பு, உணவுத் திருவிழா - பாரம்பரிய கறி விருந்து உள்ளிட்ட 50 வகைக்கும் மேலான நிகழ்ச்சி கள் மற்றும் விளையாட்டுகள் நடைபெற உள்ளன. முதல் முதலாக நடைபெறும் பொள்ளாச்சி திருவிழா சிறப் பாக நடந்திடவும், மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு கின்றன.